Saturday, April 16, 2011

கனவு சொல்லவா தோழீ

கனவு சொல்லவா தோழீ
கனவு சொல்ல வா தோழீ
மார்கழியில் மாலையிலே மலர்ந்ததொரு மல்லிகைப்பூ

Tuesday, April 12, 2011

மல்லிகை மாமாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓரடையாளம் - பின்னணி

மல்லிகை மாமாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓரடையாளம் - பின்னணி
பின்னணி கதை, பார்க்க:
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=5116

திருமணமான புதிது. சீதையும் இராமனும் காற்று நடுவே நுழையினும் பொறுத்துக்கொள்ள இயலாத அன்றில்கள்போல் இணை பிரியாமல் நெருங்கி காதல் களியில்ஈடுபட்டி ருந்தனர். வேடிக்கைப் பேச்சுகளும் வினோதக் கதைகளும் பரிமாறிக்கொண்டிருந்தனர்.

""என்னிடம் இவ்வளவு நெருங்கிப் பழகுகின்றாயே! ஏதாவது காரணத்தால் நான் பிரிந்து செல்ல நேர்ந்தால் என்ன செய்வாய்?'' என்று கேட்டான் இராமன்.

""என்ன செய்வேனா? பிரியவே முடியாதபடி கட்டிப் போட்டு விடுவேன்!'' என்றாள் சீதை.

""என்னைக் கட்ட உன்னால் முடியுமா?'' என்றான் இராமன்.

""இதோ, கட்டிக் காட்டுகிறேன்'' என்று கூறிக்கொண்டே சீதை, த

ன் கூந்தலில் சுற்றி யிருந்த மல்லிகைச் சரத்தை அவிழ்த்து, அதைக் கொண்டு அருகிலிருந்த செண்பகக் கொடியில் இராமனைக் கட்டி விட்டாள்.மல்லிகைச் சரம்தானே! இராமன் எளிதில் அறுத்துவிட மாட்டானா என்று நமக்குத் தோன்றும்.

அது வெற்று மல்லிகைச் சரமா?

கண்ணனைக் கட்டிய சகாதேவன் மனதை விடப் பல மடங்கு அன்பு அம்மல்லிகைச்சரத்தில் பிணைந்துள்ளதே! மல்லிகைச் சரத்தை அறுக்கலாம். அதில் பிணைந்துள்ளகாதலன்பை இராமனால் அறுக்க இயலுமா?

"அல்லியம்பூ மலர்க்கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம்

சொல்லுகேன் கேட்டருள்வாய்! துணை மலர்க்கண் மடமானே!

எவ்வியம்போது இனிதிருத்தல் இருந்ததோர் இடவகையில்

மல்லிகைமா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததுமோர் அடையாளம்'

என்று இராமன், சீதையைத் தேட அனுமனை அனுப்பியபோது, இச்செய்தியை அடையாளமாகக் கூறினான்.

Wednesday, March 23, 2011

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே - இப்போ
பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே
பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே - இப்போ
பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே
பேதம் தெரியல்லே

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

நானிருக்கும் இடத்தினிலே அவன் இருக்கின்றான்
அவனிருக்கும் இடத்தினிலே நான் இருக்கின்றேன்
நாளை எங்கே யாரிருப்பார் அதுவும் தெரியல்லே - இப்போ
நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் தெரியல்லை
அட என்னத்தச் சொல்வேண்டா தம்பி என்னத்தச் சொல்வேண்டா

தம்பி ஒருவன் வெளியில் நின்று காசை எண்ணுகிறான்
நம்பி ஒருவன் சிறையில் வந்து கம்பி எண்ணுகிறான்
உண்மை இங்கே கூட்டுக்குள்ளே கலங்கி நிக்ககுதடா - அட
உருட்டும் புரட்டும் சுருட்டிக் கொண்டு வெளீயில் நிற்குதடா
அட என்னத்தச் சொல்வேண்டா தம்பி என்னத்தச் சொல்வேண்டா

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

மூடருக்கும் மனிதர் போல முகம் இருக்குதடா
மோசம் நாசம் வேஷமெல்லாம் நிறைந்திருக்குதடா
காலம் மாறும் வேஷம் கலையும் உண்மை வெல்லுமடா
கதவு திறந்து பறவை பறந்து பாடிச் செல்லுமடா - அட
என்னத்தச் சொல்வேண்டா தம்பியோ என்னத்தச் சொல்வேண்டா

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

- கவிஞர் கண்ணதாசன், 1962
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
திரைப்படம்: பலே பாண்டியா, பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

Tuesday, March 8, 2011

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்
கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா? கண்மணி சுகமா? சொல் என்றாள்
கண்மணி சுகமா சொல் என்றாள்
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள் 
 
குங்குமம் இருந்தது நெற்றியிலே சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
குங்குமம் இருந்தது நெற்றியிலே சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
தங்கம் போன்ற இதழ்களிலே ஒரு கலக்கம் பிறந்தது வார்த்தையிலே

என்னுயிர்த் தாயே நீயும் சுகமா? என்னுயிர்த் தாயே நீயும் சுகமா?
இருப்பது எங்கே? சொல் என்றேன். அன்னை முகமோ? காண்பது நிஜமோ?
கனவோ? நனவோ? சொல் என்றேன். கனவோ? நனவோ? சொல் என்றேன்.

கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா? - என் கண்மணி சுகமா? சொல் என்றேன்.

கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா? கண்மணி சுகமா? சொல் என்றேன்
கண்மணி சுகமா சொல் என்றேன்

வானத்தில் இருந்தே பாடுகிறேன் - எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
வானத்தில் இருந்தே பாடுகிறேன் - எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
மகளே வாழ்கென வாழ்த்துகிறேன் - நான் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்

- கவியரசு கண்ணதாசன், காவியத் தலைவி(க்காக), 1970

ஒலி