Sunday, July 1, 2012

வலையில் சங்கம்

www.learnsangamtamil.com  - Main site - 16 of the 18 books - both languages
http://easysangamuraibyrukmani.wordpress.com - Dr. Rukmani's easy Tamil urai for 5 of the Pathuppaattu songs
http://sangamtranslationsbyvaidehi.wordpress.com  - all my translations including 500 Ainkurunuru and 400 Kurunthokai and 300 Natrinai (working on the last 100), 5 of the Pathuppaattu songs, 3 great friendships etc.
http://sangamtamilliterature.wordpress.com - has very many topics like astronomy, Kolli paavai, velan and veriyattam, thoyyil, akam conventions etc. etc. 
http://treesinsangamtamil.wordpress.com - has poems about 81 trees that are in the poems - identified and with the botancial names
http://birdsinsangamtamil.wordpress.com - poems relating to 36 birds
http://animalsinsangamtamil.wordpress.com - over 50 different creatures
http://artsinsangamtamil.wordpress.com - drums, music, musicians, drummers, dancers, painting etc. etc.
http://womeninsangamtamil.wordpress.com - female poets, jewels women wore, games women played etc.
http://sangamtamilkings.wordpress.com - 3 great kings, kuru mannarkal, 7 vallalkal, kings as poets etc.
http://sangampoemsinenglish.wordpress.com - has lots of articles and translations - started it for for my American friends
http://sangamtamilpoets.wordpress.com - poems sorted by poets
http://religionsinsangamtamil.wordpress.com - Buddhism, Jainism, Hinduism and the original Tamil deities
http://sangampoemsfordances.wordpress.com - has ideas for dancers and musicians
http://flowersinsangamtamil.wordpress.com - poems about 41 different flowers
http://flowersinsangamtamil.wordpress.com - poems about 70 plants and vines

Wednesday, December 14, 2011

ஆறு குணங்கள்?

ஆறு குணங்கள்?

shadsampathi
  1. sama - control of mind
  2. dama - control of senses
  3. titeeksh - forbearance
  4. uparvati - sense of withdrawal
  5. sradha - faith
  6. samadhana - balance of mind

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்.

Wednesday, November 30, 2011

அன்றொரு நாள் இதே நிலவில்

ஆடும் கனியை ஆடாமல் ஏடுத்தான்
வாடும் மலரை வாடாமல் தொடுத்தான்
ஆடும் கனியை ஆடாமல் ஏடுத்தான்
வாடும் மலரை வாடாமல் தொடுத்தான்
சூடிக் கொடுத்தான் பாடி முடித்தான்
பாவை மேனியிலே நீ
பார்த்தாயே வென்ணிலவே

ஆஆஆஆஆஆ

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே

திரைப்படம்: நாடோடி

வரிகள்: கண்ணதாசன்,  1966

Saturday, October 29, 2011

மலரும் வான் நிலவும் சிந்தும் (பெண்)

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

கனவில் தோன்றி சிரித்து சிரித்து நான்
காணும் இடமெங்கும் இருக்கின்றாய்
கனவில் தோன்றி சிரித்து சிரித்து நான்
காணும் இடமெங்கும் இருக்கின்றாய்
கனியில் ரசமாய் இனித்து இனித்து என்
கையில் கிடைக்காமல் மறைகின்றாய்
கனியில் ரசமாய் இனித்து இனித்து என்
கையில் கிடைக்காமல் மறைகின்றாய்
கையில் கிடைக்காமல் மறைகின்றாய்

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

மனதில் கவிதை வரைந்து வரைந்து என்னை
மயங்கச் செய்வது ன் கேளிக்கையோ?
மனதில் கவிதை வரைந்து வரைந்து என்னை
மயங்கச் செய்வது ன் கேளிக்கையோ?
தனிமைத் துயரில் தவிக்கத் தவிக்க - என்
தலைவா உனக்கிது வேடிக்கையோ?
தலைவா உனக்கிது வேடிக்கையோ?

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

-  மகாகவி காளிதாஸ் (திரைப்படம்), 1966
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1966