Sunday, August 8, 2010

நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தாதா

நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தாதா
நீரோட்டம் போலே இங்கே வாவா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே
சிரிக்கும் சிலையே வா

என்நெஞ்சம் உன்னதில்லையோ
என்றென்றும் சொந்தமில்லையோ
ஒன்றென்று வந்தல்லவோ
இன்னொன்று இங்கு வருமோ

வாவென்று சொல்லுமுன்னமே
சம்மதம் இங்குவருமே
தாஎன்று சொல்லுமுன்னமே
தேனிதழ் கொஞ்ச வருமே

இனிக்கும் பூவில்
மிதக்கும் தேனை
சுவைக்க தடையுமுண்டோ

...

- கண்ணதாசன், 1963
காதலிக்க நேரமில்லை

No comments:

Post a Comment