Thursday, December 30, 2010

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

-கண்ணதாசன்

Sunday, December 26, 2010

மாம்பழத்து வண்டு

மாம்பழத்து வண்டு வாசமலர்ச் செண்டு
யார்வரவைக் கண்டு வாடியது இன்று!

கோடி விழி பட்டு கோல விழி சிட்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு
கோடி விழி பட்டு கோல விழி சிட்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு

ஓ....................................................................

மாம்பழத்து வண்டு வாசமலர்ச் செண்டு
யார்வரவைக் கண்டு வாடியது இன்று!

கோடை மழை மேகம் கோபுரத்து தேகம்
கொஞ்ச வரும் நேரம் கொண்டதென்ன கோபம்
கொஞ்ச வரும் நெரம் கொண்டதென்ன கோபம்

என்னுதென்ன என்றாய் நான் இருக்கும்போது
என்னுதென்ன என்றாய் நான் இருக்கும்போது
தென்றல் வந்து உன்னை தீண்டியது என்ன ? ? ? ?

ஓ........................................................................

மாம்பழத்து வண்டு வாசமலர்ச் செண்டு
யார்வரவைக் கண்டு வாடியது இன்று!

கன்னியர்க்கு தென்றல் அன்னை முறை அன்றோ
அன்னையவள் மெல்ல ஆடை தொடுவளா
சொன்னபடி கேட்டு என்ன செய்ய வேண்டும்
கன்னி உன்னை எந்தன் கை சிறையில் வைத்தேன்
ஓ............................................................................................


மாம்பழத்து வண்டு வாசமலர்ச் செண்டு
யார்வரவைக் கண்டு வாடியது இன்று!

கோடி விழி பட்டு கோல விழி சிட்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு

தேடிச் சோறு நிதம் தின்று

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?


-பாரதி 

Sunday, December 19, 2010

அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்

அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா

அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா
ஒண்ணோடு ஒண்ணாக...கண்ணோடு கண்ணாக
அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா

நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா
நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா

மேகங்கள் இல்லாத வானில்லையே
நீயின்றி எப்போதும் நானில்லையே
மேகங்கள் இல்லாத வானில்லையே
நீயின்றி எப்போதும் நானில்லையே

ஒண்ணோடு ஒண்ணாக...கண்ணோடு கண்ணாக
அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா

வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
வாடைக்கு சுகமாக வருகின்றதோ
வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
வாடைக்கு சுகமாக வருகின்றதோ

எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா
எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா

ஒண்ணோடு ஒண்ணாக...கண்ணோடு கண்ணாக
அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா

சிப்பிக்குள் முத்துக்கள் நான் பார்க்கவா
சிந்தாத முத்தங்கள் நான் கேட்கவா
எப்போது கேட்டாலும் தருவேனம்மா
எங்கே நீ இருந்தாலும் வருவேனம்மா

ஒண்ணோடு ஒண்ணாக...கண்ணோடு கண்ணாக
அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா
ஒண்ணோடு ஒண்ணாக...கண்ணோடு கண்ணாக

படம்: பொல்லாதவன்
பாடல்: கண்ணதாசன், 1980
இசை: விஸ்வநாதன்
குரல்: பாலா, வாணி ஜெயராம்

Sunday, November 21, 2010

மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே

மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே  
 

ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
ரரிரரிரா ரரிரரார ரரிரரிரா ரரிரரா

மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
அன்னமே சொர்ணமே அன்றுதான் இந்த ஊர்வலம்
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே

ஆல வட்டம் போடுதடி நெல்லுப்பயிரு
ஆள வட்டம் போடுதடி கள்ளப்பருந்து
மாலயிட போரவன கண்ணில் கலந்து
மங்கை மனம் அலையுதடி மெல்லப்பறந்து
தங்கமே வைரமே இளங்கிளியே குயிலே மயிலே
இது உண்மையடி

மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே

ஊருக்கெல்லாம் பாக்கு வச்சு காத்திருப்பேன்
ஊரையெல்லாம் பாக்க வச்சு மணம் முடிப்பேன்
கூரச்சேல சரசரக்க அஞ்சி நடப்பேன்
கொண்டவனின் குணம் அறிந்து கொஞ்சி சிரிப்பேன்
அம்மம்மா செல்லம்மா இந்த மயக்கம் எனக்கும் பொறக்கும்
புது சுகமிருக்கும்

மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்


படம்: லட்சுமி
ஆண்டு:1979
வரிகள்: ஆலங்குடி சோமு
குரல்: எஸ்.பி.சசிரேகா
இசை: இளையராஜா
பாத்திரம்: ஸ்ரீதேவி
இயக்கம்:

Thursday, November 18, 2010

நீ வருவாய் என நான் இருந்தேன்(கண்ணதாசன், 1980, படம்: சுஜாதா)

 நீ வருவாய் என நான் இருந்தேன்(கண்ணதாசன், 1980, படம்: சுஜாதா)

அந்தரங்க நீர்க்குளத்தே
பூத்திருந்த தாமரைகள்
அந்தியிலே மொட்டாகி
சிந்தையிலே கோலமிட்டதோ
காதலிலே நீர்வேட்டை
காற்றினிலே மாளிகைகள்
வானகத்து வீதியினிலே
வலம்போகும் கற்பனைகள்
நான் அவரை பார்த்துவிட்டேன்
அத்தனையும் கனவுகளே


நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்

கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை
வாராயோ….

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்

அடிதேவி உந்தன் தோளில்
புதுபூவானால் இன்று
(அடிதேவி உந்தன் தோளில்
புதுபூவானால் இன்று)
அடிதேவி உந்தன்தோழி
ஒருதூதானாள் இன்று

இரவெங்கே உறவெங்கே
உனைக் காண்பேனோ என்றும்
இரவெங்கே உறவெங்கே
உனைக் காண்பேனோ என்றும்

அமுத நதியில் தினமும் என்னை நனையவிட்டு
இதழை மறைத்துக் கொண்ட இளமை அழகுசிட்டு
தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு வாராயோ?

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்

ஒரு மேடை ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே
 ஒரு மேடை ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே

குழல்மேகம் தரும் ராகம்
அது நாடாதோ என்னை?
குழல்மேகம் தரும் ராகம்
அது நாடாதோ என்னை?
சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு
எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல வாராயோ?

கண்ணதாசன், 1980, படம்: சுஜாதா
அம்மம்மா! அற்புதம்!

Sunday, November 14, 2010

பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவேபோல்

பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செஞ் சொற் கவி இன்பம்-
கன்னிம் மாடத்து உம்பரின் மாடே, களி பேடோடு
அன்னம் ஆடும் முன் துறை கண்டு, அங்கு, அயல் நின்றாள்.

See

http://www.tamilkalanjiyam.com/literatures/kambar/ramayanam/mithilaikatchippadalam.html

learn sanskrit online with links to Bagavath Gita

http://www.ibiblio.org/sanskrit/
Gita on YouTube

Bhagavad-Gita Translation 1 - Chapter 1.1- 1.35 - Swami Brahmananda


http://www.youtube.com/watch?v=jGm_ojemYpE

Wednesday, November 3, 2010

தேவன் கோவில் மணி ஓசை

தேவன் கோவில் மணி ஓசை - நல்ல
சேதிகள் சொல்லும் மணி ஓசை
பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
பாசத்தின் ஓசை மணி ஓசை
(தேவன்)

ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்
உதவும் கோவில் மணி ஓசை
தாயார் வடிவில் தாவி அணைத்தே
தழுவும் நெஞ்சில் மணி ஓசை
இது உறவினை கூறும் மணி ஓசை
இவன் உயிரினை காக்கும் மணி ஓசை
(தேவன்)

அருமை மகனே என்றொரு வார்த்தை
வழுங்கும் கோவில் மணி ஓசை
அண்ணா அண்ணா என்றோர் குரலில்
அடங்கும் கோவில் மணி ஓசை
இது ஆசை கிழவன் குரலோசை
அவன் அன்பினை காட்டும் மணி ஓசை
(தேவன்)

- கன்னதாசன், மணி ஓசை,  ஆண்டு: ?, சீர்காழி கோவிந்தராஜன்

Saturday, October 23, 2010

learn sanskrit and devanagari

01/12/11

Thinnai 1
Thinnai 2
Thinnai 3
Thinnai 4
Thinnai 5
Thinnai 6
Thinnai 7
Thinnai 8

Thinnai 9
Thinnai 10

Thinnai 11
Thinnai 12
Thinnai 13
Thinnai 14
Thinnai 15
Thinnai 16
Thinnai 17
Thinnai 18
Thinnai 19
Thinnai 20

Thinnai 21
Thinnai 22
Thinnai 23
Thiinai 24
Thinnai 25
Thinnai 26

Thinnai 27
Thinnai 28
Thinnai 29
Thinnai 30

Thinnai 31
Thinnai 32
Thinnai 33
Thinnai 34 
Thinnai 35
Thinnai 36
Thinnai 37




01/11/11
Learn Sanskrit at Thinnai
http://www.thinnai.com/?module=displaystory&story_id=51101091&format=html


01/10/11

Typing Sanskrit using English keyboard

http://www.lexilogos.com/keyboard/sanskrit_devanagari.htm

Learn Sanskrit script 

http://www.avashy.com/hindiscripttutor.htm

Kids speaking Sanskrit
http://www.youtube.com/watch?v=Zp-T7W3J2c0

Bajaj Ad
http://www.youtube.com/watch?v=8FTVGNdDp2o&NR=1

About my Family (Spoken Sanskrit) मम कुलस्य वृत्तान्तः

http://www.youtube.com/watch?v=rvI_yTVdSeQ&NR=1

Monday, September 6, 2010

பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள்
                   -மகாகவி பாரதி

Sunday, August 8, 2010

நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தாதா

நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தாதா
நீரோட்டம் போலே இங்கே வாவா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே
சிரிக்கும் சிலையே வா

என்நெஞ்சம் உன்னதில்லையோ
என்றென்றும் சொந்தமில்லையோ
ஒன்றென்று வந்தல்லவோ
இன்னொன்று இங்கு வருமோ

வாவென்று சொல்லுமுன்னமே
சம்மதம் இங்குவருமே
தாஎன்று சொல்லுமுன்னமே
தேனிதழ் கொஞ்ச வருமே

இனிக்கும் பூவில்
மிதக்கும் தேனை
சுவைக்க தடையுமுண்டோ

...

- கண்ணதாசன், 1963
காதலிக்க நேரமில்லை

Thursday, June 24, 2010

R P ராஜநாயஹம் - நல்லதொரு வலைபூ

http://rprajanayahem.blogspot.com/

Sample
http://rprajanayahem.blogspot.com/2008/10/blog-post_20.html

கண்ணதாசனின் அரசியல் வாழ்வு

அரசியலில் இருந்துகொண்டே சினிமாவுக்கு பாடல் எழுதிய கண்ணதாசன் அவ்வப்போதைய அரசியல் சூழ்நிலை ,தன் மன நிலை இரண்டையும் சினிமா பாடல்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் .
திமுக வில் இருந்து சம்பத்தோடு வெளியேறிய சூழலில் அண்ணாதுரை பற்றி " அவனை நினைத்தே நானிருந்தேன் . அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான் . இன்னும் அவனை மறக்கவில்லை . அவன் இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை . அண்ணன் காட்டிய வழியம்மா . " -படித்தால் மட்டும் போதுமா .
தமிழ் தேசிய கட்சி காங்கிரஸில் இணையும் சூழலில் காமராஜரை குறித்து ' அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி . என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி .' வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி ' என்ற பாடல் - பட்டணத்தில் பூதம் .
இப்படி பல பாடல்கள் பற்றி அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான வுலகத்திலே " அவர் அண்ணா ஏ எல் எஸ் இவர் கேட்டு பணம் கொடுக்காததனால் .
பட்டிமன்ற பேச்சாளர்கள் , பிரபலமான பேச்சாளர்கள் மட்டுமல்ல சாதாரண உரையாடல்களில் இப்படி பலரும் பல கண்ணதாசன் பாடல்கள் பற்றி பேசிகொள்வார்கள் .
நான் இங்கு குறிப்பிட போகும் பாடல் பற்றி யாருக்கும் தெரியாது . ஏனென்றால் இந்த பாடல் பற்றி யாருமே குறிப்பிட்டதில்லை .
"நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்" பாட்டின் சரண வரிகள் .
அப்போதெல்லாம் தி.மு.க வுக்கு அடுத்த இடத்தில் ஸ்தாபன காங்கிரஸ் இருந்தது . கண்ணதாசன் இந்திரா காங்கிரஸ் . என்றாலும் கண்ணதாசனின் இயல்பான மீறல் காமராஜரை தன் தலைவராக வரித்து இரண்டு காங்கிரஸ் இயக்கமும் இணைந்து அரசியல் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் உறுதி கொண்டிருந்தார் . காமராஜர் மேல் அளவு கடந்த பற்று . திமுக உக்கு எதிர்க்கட்சி ஸ்தாபன காங்கிரஸ் . திமுக இறங்கினால் ஸ்தாபன காங்கிரஸ் ஆட்சி கட்டில் ஏறும் என்ற நிலை .( தீப்பொறி ஆறுமுகம் அப்போது ஸ்தாபன காங்கிரஸ் பேச்சாளர் !)
திடீரென்று எம்ஜியார் திமுகவிலிருந்து விலகி அண்ணா திமுக ஆரம்பித்தவுடன் மக்கள் செல்வாக்கு அவருக்கு வந்து விட்டது . நாஞ்சில் மனோகரன் தான் கண்ணதாசனின் அரசியல் எதிரி என்று கவிஞர் அறிவித்திருந்தார் . திண்டுக்கல் பாராளுமன்ற இடைதேர்தலில் நாஞ்சில் மனோகரன் எம்ஜியாரால் வேட்பாளர் ஆக்கப்பட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என கண்ணதாசன் பகிரங்கமாக அறிவித்தார் .
திராவிட தலைவர்களில் நாஞ்சில் மனோகரனையும் மாதவனையும் கண்ணதாசனுக்கு பிடிக்காது . மந்திரகோல் மைனர் சுகவாசியாய் எந்த தியாகமும் செய்யாதவர் என்று கண்ணதாசனுக்கு கோபம் . மாதவன் திமுக வேட்பாளராய் கண்ணதாசன் நின்று தோற்ற தொகுதியை அடுத்த பொது தேர்தலில் திமுக வேட்பாளராய் கைப்பற்றியவர் . அதற்கடுத்த தேர்தலில் மீண்டும் வென்று அண்ணா மந்திரி சபையில் மந்திரியானவர் . மாதவனை பாராட்டி திமுக தொண்டர்கள் வீரவாள் கொடுத்தார்கள் . உடனே கண்ணதாசன் தன் " கடிதம் " பத்திரிகையில் ' தம்பிகள் கத்தி கொடுத்தார்கள் . பாவம் கிண்ணத்தை கொடுக்க மறந்து விட்டார்கள் ' என்று கிண்டல் செய்து எழுதினார் .
திமுகவை வெறுத்த கண்ணதாசனுக்கு திமுகவில் இரண்டு பேர் மேல் மட்டும் பாசம் கடைசிவரை இருந்தது . ( கருணாநிதி , அன்பில் தர்மலிங்கம் )
திண்டுக்கல் பாராளுமன்ற இடை தேர்தலில் மாயத்தேவர் நிறுத்தப்பட்டு அண்ணா திமுக அமோக வெற்றி . ஸ்தாபன காங்கிரஸ் இரண்ட்ராமிடம் . திமுக மூன்றாமிடம் . இந்திரா காங்கிரஸ் நான்காமிடம் .
'சிவகாமி உமையவளே முத்துமாரி உன் செல்வனுக்கு காலம் உண்டு முத்துமாரி '
என்று காமராஜர் எதிர்காலம் பற்றி கணித்த கண்ணதாசனுக்கு அரசியல் சூழல் மாறிவிட்டது என புரிந்து விட்டது . எம்ஜியாரை கடுமையாக எதிர்த்தவர் கண்ணதாசன் . எம்ஜியாரும் அவர் கட்சியும் தமிழகத்தை ஆக்கிரமித்ததை அவலமாக நினைத்து தான்
" அழகாக தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன் .
அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன் .
சதிகார கும்பல் ஒன்று சபையேற கண்டேன் "
தன் பதற்றத்தை கண்ணதாசன் ' என் மகன் ' படப்பாடலில் வெளிப்படுத்தினார் .
தொடர்ந்து எம்ஜியாரை கடுமையாக சாடினார் . எம்ஜியார் முதல் முறை ஆட்சியமைத்தபோது மதுவிலக்கை கடுமையாக அமல் படுத்தினார் .
கண்ணதாசன் பத்திரிகையில் ஒரு கேள்வி
ஒன்றிற்கு மேற்பட்ட மது பெர்மிட் வைத்திருப்பவர்கள் சரண்டர் செய்யவேண்டும் என்று எம்ஜியார் ஆணையிட்டிருக்கிராரே ?
கண்ணதாசன் பதில்
'ஆண்டவனே வந்து கேட்டாலும் நான் சரண்டர் செய்யமாட்டேன் . உங்கள் எம்ஜியாரிடம் இன்னொரு சட்டம் போட சொல்லுங்கள் ; 'ஒரு காதலிக்கு மேல் வைத்திருப்பவர்களை சரண்டர் செய்ய சொல்லுங்கள் '
கடைசியில் எம்ஜியார் கண்ணதாசனை தமிழக அரசின் ஆஸ்தான கவியாக நியமித்தார் . உடனே கண்ணதாசன் சொன்னார் !
" எம்ஜியாருடன் நான் வாழ்நாள் முழுவதும் நடத்திய யுத்தத்தில் கடைசியாக தோற்று விட்டேன் "
கண்ணதாசனின் பாடல்களை காட்டிலும் அவரது அரசியல் வாழ்க்கை தான் ரொம்ப விஷேசமானது .
ஒரு முறை குமுதம் கேள்வி பதிலில்
கேள்வி : எம்ஜியாரின் 'நான் ஏன் பிறந்தேன் ', கருணாநிதி யின்' நெஞ்சுக்கு நீதி' , கண்ணதாசனின் 'வனவாசம்' ஆகிய சுயசரிதை நூல்களில் எந்த நூல் சிறந்தது ?
அரசு பதில் : 'வன வாசம்' தான் . ஏனென்றால் அதில் "உண்மை " இருக்கிறது .

 

Sunday, June 6, 2010

பொன்னென்றும் பூவென்றும் - நிலவே நீ சாட்சி - க்ண்ணதாசன் - 1970 - MSV - SPB

சொன்னவர்க்கே சரண் நாங்களே
--------------------------------------------
ம்ம்ம்ம்ம் ஆஹாஆஆஆஆ

பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ ஓஓஓஒ

பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப்பார்த்தால் சொல்லத்தோன்றும்
இன்னும் நூறாயிரம் ம்ம்ம்ம்ம்ம்
இன்னும் நூறாயிரம் ...

மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து
மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து
மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து
மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து

போதை மதுவாக பொன்மேனி மலர்ந்து
பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து
பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து

பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப்பார்த்தால் சொல்லத்தோன்றும்
இன்னும் நூறாயிரம் ம்ம்ம்ம்ம்ம்

கோடை வசந்தங்கள் குளிர்காலம் என்று
ஓடும் பருவங்கள் கணநேரம் நின்று
காதல் கவி பாடும் அவள் மேனி கண்டு
காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று
காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று

கன்னி இளம் கூந்தல் கல்யாண பள்ளி
கண்கள் ஒளி வீசும் அதிகாலை வெள்ளி
கன்னி இளம் கூந்தல் கல்யாண பள்ளி
கண்கள் ஒளி வீசும் அதிகாலை வெள்ளி
தென்றல் விளையாடும் அவள் பேரைச்சொல்லி
இன்பம் அவளின்னும் அறியாத கல்வி
இன்பம் அவளின்னும் அறியாத கல்வி

பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப்பார்த்தால் சொல்லத்தோன்றும்
இன்னும் நூறாயிரம் ம்ம்ம்ம்ம்ம்
இன்னும் நூறாயிரம் ...

பொன்னென்ன பூவென்ன கண்ணே - அலைகள் - 1973 - கண்ணதாசன் - ஸ்ரீதர் - எம். எஸ்.வி


 

பொன்னென்ன பூவென்ன கண்ணே

பொன்னென்ன பூவென்ன கண்ணே 
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே


மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு மல்லிகைப்பூ
யார் வருவார் யார் பறிப்பார்
யார் அறிவார் இப்போது


ஊர்கோலம் போகின்ற பூன்தென்றலும்
ஒலியோடு நடைபோடும் நீரோடையும்
சுகமானது சுவையான்து
உன்வாழ்வும் அது போல உயர்வானது


செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா
நடை போடுமா இசை பாடுமா
நம் வாழ்வும் அது போல ..

 
Check out,
http://www.dhool.com/sotd2/766.html
Search for "vilai maathu" on that page


Links to the audio of songs from the movie


விலை மாது

http://www.dhool.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/7661.rm



ஊமை பெண்ணை
http://www.dhool.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/7662.rm



பச்சை இலை போலே

http://www.dhool.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/7663.rm

பொன்னென்ன பூவென்ன கண்ணே

http://www.dhool.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/7664.rm



ponnenna puuvenna kaNnae
un kaNnaadi uLlaththin munnae
oru kalyaaNap peNnaaga unnai
puvi kaaNaamal poagaathu peNnae


maargazhiyil maalaiyilae
malarndhathoru malligaippuu
yaar varuvaar yaar paRippaar
yaar aRivaar ippoathu


uurkoalam poaginra puundhenRalum
oliyoadu nadaipoadum niiroadaiyum
sugamaanathu suvaiyaanthu
unvaazhvum athu poala uyarvaanathu


sevvaana maegangaL kuzhalaagumaa
sendhuuram viLaiyaadum mugamaagumaa
nadai poadumaa isai paadumaa
nam vaazhvum athu poala ..

அகர முதல எழுத்தெல்லாம், agara muthala ezuththellaam,

அகர முதல எழுத்தெல்லாம், agara muthala ezuththellaam

Video links to skit presented in CTA, Cupertino Annual Day 2009 at Flint Center, Cupertino


http://www.youtube.com/watch?v=xQPCi_Kz-o0

http://www.youtube.com/watch?v=hCOOVAAIqnk

http://www.youtube.com/watch?v=CFATbKdSt8I

http://www.youtube.com/watch?v=tmdtIkI8zRE

http://www.youtube.com/watch?v=DCmeMQHSAcE

http://www.youtube.com/watch?v=OSfbpyMMkjo

Saturday, June 5, 2010

பிறப்பொக்கும்-2010 pirappokkum-2010

 Video recording of Pirappokkum skit in Cupertino  CTA Annual Day 2010 at Campbell, California, USA


Video upload by Sreedhar


1) Skit Performance - Scene 1 - http://www.youtube.com/watch?v=DSkRynHA48E
2) Skit Performance - Scene 2 - http://www.youtube.com/watch?v=myKW2tsKuE0
3) Song Performance: http://www.youtube.com/watch?v=LW2vEfufu_4

Saturday, May 29, 2010

முத்து நகையே உன்னை நானறிவேன்

முத்து நகையே உன்னை நானறிவேன்
தத்தும் கிளியே என்னை நீயறிவாய்
நம்மை நாம் அறிவோம்

Monday, May 3, 2010

திருவிளையாடல் புராணம் மற்றும் பல சிவ நூல்கள்

திருவிளையாடல் புராணம் மற்றும் பல சிவ நூல்கள்
பார்க்க
http://shaivam.org/siddhanta/sta.htm

Sunday, May 2, 2010

பால் தமிழப்பால்

பால் தமிழப்பால்
எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால்
அதன் சிரிப்பால்
சுவை அறிந்தேன்

பால் மனம்பால்
என்ற மதிப்பால்
தந்த அழைப்பால்
உடல் அணைப்பால்
சுகம் தெரிந்தேன்

உந்தன் பிறப்பால்
உள்ள வனப்பால்
வந்த மலைப்பால்
கவி புனைந்தேன்

அன்பின் விழிப்பால்
வந்த விருப்பால்
அன்பின் விழிப்பால்
வந்த விருப்பால்
சொன்ன உவப்பால்
மனம் குளிர்ந்தேன்

விழிச் சிவப்பால்
வாய் வெளுப்பால்
விழிச் சிவப்பால்
வாய் வெளுப்பால்
இடை இளைப்பால்
நிலை புரிந்தேன்

இன்பத் தவிப்பால்
மனக் கொதிப்பால்
இன்பத் தவிப்பால்
மனக் கொதிப்பால்
கண்ட களைப்பால்
நடை தளர்ந்தேன்

முத்துச் சிரிப்பால்
முல்லை விரிப்பால்
முத்துச் சிரிப்பால்
முல்லை விரிப்பால்
மொழி இனிப்பால்
என்னை இழந்தேன்

இந்த இணைப்பால்
கொண்ட களிப்பால்
இந்த இணைப்பால்
கொண்ட களிப்பால்
தொட்ட சிலிர்ப்பால்
தன்னை மறந்தேன்

பால் தமிழ்ப்பால்
எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால்
அதன் சிரிப்பால்
சுவை அறிந்தேன்

-கவியரசு கண்ணதாசன்
படம்: ரகசிய போலீஸ் 115, 1968

For more MGR Song Lyrics see  http://mgrsongs.blogspot.com/

Wednesday, April 7, 2010

உள்ளம் உடைமை உடைமை

592   ​உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
      நில்லாது நீங்கி விடும்.       (உரை)
                -- 60  ஊக்கமுடைமை - அரசியல் - பொருள்
ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும்; மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.
- மு.வரதராசனார்

Psychic heart is wealth indeed
Worldly wealth departs in speed.
- Sudhdhaanandha Bharadhi

See http://kural.nettil.com

Saturday, April 3, 2010

Inputting Tamil character in Vim on XP

Open the file with gvim. The file should have been encoded in UTF-8.
I am opening a file which was created earlier with Notepad with some Tamil text and saved in UTF-8 encoding.
:set enc=utf-8
:set gfn=*
This would pop up a window to choose font
Select TheneeUni, Click OK
This would show any Tamil in text already in the file.
To input Tamil char, enter
Ctrl-quxxxx
xxxx stands for 4 hex chars corresponding to unicode point of the Tamil char
For example, to input Tamil அ
Do
Ctrl-qu0b85

Thanks to
http://www.mail-archive.com/vim@vim.org/msg09732.html
gvim does support Unicode, but it may be easier or harder depending on your OS and its settings. The easiest is of course if you start gvim in a Unicode locale, or, on Unix, if you run a version compiled for the GTK2 toolkit (which uses Unicode by default). Here is a code snippet which you can paste into your vimrc to enable support for Unicode in all versions which have Unicode support compiled-in.
if has("multi_byte")    " if not, we need to recompile
  if &enc !~? '^u'      " if the locale 'encoding' starts with u or U
                        " then Unicode is already set
    if &tenc == ''
      let &tenc = &enc  " save the keyboard charset
    endif
    set enc=utf-8       " to support Unicode fully, we need to be able
                        " to represent all Unicode codepoints in memory
  endif
  set fencs=ucs-bom,utf-8,latin1
  setg bomb             " default for new Unicode files
  setg fenc=latin1      " default for files created from scratch
else
  echomsg 'Warning: Multibyte support is not compiled-in.'
endif
You must also set a 'guifont' which includes the glyphs you will need, but most fonts don't cover the whole range of "assigned" Unicode codepoints from U+0000 (well, U+0020 since 0-1F are not "printable") to U+10FFFF (well, U+10FFFD since anything ending in FFFE or FFFF is invalid). If you are like me, you will have to set different fonts at different times depending on what languages you're editing at any particular moment. Courier New has (in my experience) a wide coverage for "alphabetic" languages (Latin, Greek, Cyrillic, Hebrew, Arabic); for Far Eastern scripts you will need some other font such as FZ FangSong or MingLiU.
With the above settings, Unicode files will be recognised when possible:
- Any file starting with a BOM will be properly recognised as the appropriate Unicode encoding (out of, IIUC, UTF-8, UTF-16be, UTF-16le, UTF-32be and UTF-32le). - Files with no BOM will still be recognised as UTF-8 if they include nothing that is invalid in UTF-8.
- Fallback is to Latin1.
- The above means that 7-bit US-ASCII will be diagnosed as UTF-8; this is not a problem as long as you don't add to them any characters with the high bit set, since the codepoints U+0000 to U+007F have both the same meaning and the same representation in ASCII and UTF-8. The first time you add a character above 0x7F to such a file, you will have to save it with, for instance,
:setlocal fenc=latin1
        :w
if you want it to be encoded in Latin1. From then on, the file (containing one or more bytes with high bit set in combinations invalid in UTF-8) will be recognised as Latin1 by the 'fileencodings' heuristics set above. - It also means that for non-UTF-8 Unicode files with no BOM, or in general for anything not autodetected (such as 8-bit files other than Latin1), you will have to specify the encoding yourself (e.g. ":e ++enc=utf-16le filename.txt"). Also with the above settings, new files will be created in Latin1. To create a new file in UTF-8, use for instance
:enew
        :setlocal fenc=utf-8


See
        :help Unicode
        :help 'encoding'
        :help 'termencoding'
        :help 'fileencodings'
        :help 'fileencoding'
        :help 'bomb'
        :help ++opt


HTH,
Tony.

Sunday, March 14, 2010

எங்கே நீயோ நானும் அங்கே

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடுஎங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு
என் கண்ணோடு
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்
வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்
கண்ணில் நீரைக் காணாமல்
கவலை ஏதும் கூறாமல்
என்னை எண்ணி வாழாமல்
உனக்கென நான் வாழ்வேன்

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

காலம் வரும் என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும்
காத்திருப்பேன் என் பாதையில் தெய்வம் இணைந்து விடும்
காலம் வரும் என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும்
காத்திருப்பேன் என் பாதையில் தெய்வம் இணைந்து விடும்
காதல் என்றால் சேயாவேன்
கருணை என்றால் தாயாவேன்
கண்ணா உந்தன் நிழலாவேன்
உனக்கென நான் வாழ்வேன்

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

- கண்ணதாசன், 1967
பாடல்: எங்கே நீயோ நானும் அங்கே
திரைப் படம்: நெஞ்சிருக்கும் வரை
பாடியவர்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
நடிகை: கே.ஆர்.விஜயா

Wednesday, March 10, 2010

எங்கேயோ பார்த்த முகம்

எங்கேயோ பார்த்த முகம்
எங்கேயோ பார்த்த முகம்

இருவிழி மேடையில் எழுதிய ஓவியம்
இருவிழி மேடையில் எழுதிய ஓவியம்
புதுநிலவோ பூச்சரமோ
மதுமலரோ மாணிக்கமோ
எங்கேயோ பார்த்த முகம்
எங்கேயோ பார்த்த முகம்

எழுந்தே நடந்தாள் மயில் தான் இவளோ
கனிவாய் மொழிந்தால் குரல் தான் குயிலோ
கலைக்கொரு கோவில் இவள் தானோ
கலைக்கொரு கோவில் இவள் தானோ

ஊர்வசியோ மேனகையோ
வான் பிறையோ தாரகையோ
இரு விழி மேடையில் எழுதிய ஓவியம்
புது நிலவோ பூச்சரமோ
மதுமலரோ மாணிக்கமோ

எங்கேயோ பார்தத முகம்
எங்கேயோ பார்த்த முகம்

நிழல் போல் குழல் தான்
குடை போல் அமைய
தளிர்பூங்கொடி போல் இடை தான் அசைய
வளைகரம் ஆட வருவாளோ
வளைகரம் ஆட வருவாளோ

ஊர் மயங்கும் பேரழகோ
ஓடிவரும் தேர் அழகோ
இருவிழி மேடையில் எழுதிய ஓவியம்
புது நிலவோ பூச்சரமோ
மதுமலரோ மாணிகமோ

எங்கேயோ பார்த்த முகம்
எங்கேயோ பார்த்த முகம்

- கண்ணதாசன், 1969
படம்: நில் கவனி காதலி
இசை: எம்.எஸ்.வி
பாடியவர்கள்: பி.பி.ஸ்ரீனிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி

ஆண்டு வாரியான தமிழ் படங்கள்

http://ta.wikipedia.org/wiki/பகுப்பு:ஆண்டு_வாரியாக_திரைப்படங்கள்

Wednesday, March 3, 2010

false bhagavans

Good commentary at
http://www.enlightened-spirituality.org/deeksha_oneness.html

Highlights:
A genuine Guru or "remover of spiritual darkness" simply and consistently points the aspirant back to this intrinsic, inborn (sahaja) "Inner Guru" Reality. The authentically helpful human Guru or Friend does NOT needlessly entice one into an external "Grace chase," pompous worldly schemes, "energy experiences," or any other worldly phenomena high or low (heavenly, earthly, etc.). 

By contrast, however, a false or pseudo-guru, however, will use all sorts of tricks to create dependency, limited identifications, attachments, complications and delusions so that you feel like a special "somebody," somebody who is part of an elite group which is now especially empowered to usher in a Golden Age of Enlightenment for all lesser beings.

Monday, March 1, 2010

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன்
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே!

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்

தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்

முடவர்களை நடக்க வைக்கும் ப்ருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் ப்ருந்தாவனம்
முடவர்களை நடக்க வைக்கும் ப்ருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் ப்ருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் ப்ருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் ப்ருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் ப்ருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் ப்ருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் சந்நிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம்
சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம்

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் கண்ணா கண்ணா கண்னா!

கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான்

- கண்ணதாசன், 1966, ராமு
இசை: M.S.V
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், T.M. சௌந்தரராஜன்

Sunday, February 28, 2010

இயக்குநர் ஸ்ரீதர்

கவிதைகள் மின்னும் களமாக கதை செய்தவர்.
அந்த கதை களத்தில் கவிஞரின் கவிதைகளை மின்னச் செய்தவர்.

பார்க்க:
Posts on Sridhar: 
http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1584666
http://www.hindu.com/fr/2008/10/24/stories/2008102450500400.htm
http://awardakodukkaranga.wordpress.com/2008/10/25/ஸ்ரீதர்-பற்றி-இளையராஜா/
http://awardakodukkaranga.wordpress.com/2008/10/25/ஸ்ரீதரை-பற்றி-அவர்-மனைவி/
http://awardakodukkaranga.wordpress.com/2008/10/25/ஸ்ரீதர்-பற்றி-எம்எஸ்வி/


http://awardakodukkaranga.wordpress.com/ஸ்ரீதருக்கு-அஞ்சலி


ஸ்ரீதர் பட லிஸ்ட்:
  1. 1959, கல்யாணப் பரிசு, விகடன் விமர்சனம்
  2. 1960, விடிவெள்ளி
  3. 1960, மீண்ட சொர்க்கம் (நன்றி, பார்டிசன்!)
  4. 1961, தேனிலவு
  5. 1962, நெஞ்சில் ஓர் ஆலயம்
  6. 1962, போலீஸ்காரன் மகள்
  7. 1962, சுமைதாங்கி
  8. 1963, நெஞ்சம் மறப்பதில்லை
  9. 1964, கலைக் கோவில்
  10. 1964, காதலிக்க நேரமில்லை1, 2, 3, 4
  11. 1965, வெண்ணிற ஆடை
  12. 1967, நெஞ்சிருக்கும் வரை
  13. 1967, ஊட்டி வரை உறவு
  14. 1969, சிவந்த மண்
  15. 1971, அவளுக்கென்று ஒரு மனம்
  16. 1974, உரிமைக் குரல்
  17. 1975, வைர நெஞ்சம்
  18. 1978, இளமை ஊஞ்சலாடுகிறது
  19. 1979, அழகே உன்னை ஆராதிக்கிறேன்
  20. 1981, மோகனப் புன்னகை
  21. 1982, நினைவெல்லாம் நித்யா
  22. 1983, துடிக்கும் கரங்கள்
  23. 1983, ஒரு ஓடை நதியாகிறது
  24. 1984, ஆலய தீபம்
  25. 1985, தென்றலே என்னை தொடு
  26. 1986, நானும் ஒரு தொழிலாளி
  27. 1986, யாரோ எழுதிய கவிதை
  28. 1987, இனிய உறவு பூத்தது
  29. 1991, தந்துவிட்டேன் என்னை
  30. கொடிமலர்
  31. அலைகள்
  32. மீனவ நண்பன்
  33. ஓ மஞ்சு
  34. ஸௌந்தர்யமே வருக வருக
இதை தவிர அவர் 1954-எதிர்பாராதது, 1956-அமர தீபம், 1961-புனர்ஜென்மம், 1959-உத்தம புத்திரன் ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதி இருக்கிறார்.

Saturday, February 27, 2010

இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்

இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே - பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே

(இளமை)

அணைத்து வளர்ப்பவளூம் தாயல்லவோ
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ
புலவர் பாடுவதும் கவிஞர் நாடுவதும்
கலைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ - பெண்
இயற்கையில் சீதனப் பரிசல்லவோ

(இளமை)

பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா - ஒரு
பூவைக்கு மாலையிடும் மணம் வருமா
இன்று தேடி வரும் நாளை ஓடி விடும்
செல்வம் சிரித்தபடி அமுதிடுமா - எந்தச்
செல்வமும் பெண்மையின் சுகம் தருமா

(இளமை)
- கண்ணதாசன், 1962

படம் : ஹலோ மிஸ்டர் ஜமீந்தார்
குரல் : சுசீலா
இசை : வி- ரா
நடிகை : சாவித்திரி

நன்றி: சந்த்ரு
http://psusheela.org/tam/show_lyrics.php?id=687

Sunday, February 14, 2010

மௌனம்

பார்க்க
http://www.thannambikkai.net/2005/06/01/2885/

மௌனம் என்பது வரம்

- Author: பேராசிரியர் டாக்டர். பி.கி. சிவராமன்,  Jun 2005

மோனம் என்பது ஞான வரம்பு
- ஔவையார்

சும்மா இரு சொல்லற என்றதுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே
- அருணகிரிநாதர், கந்தர் அனுபூதி

பிள்ளை மதி செஞ்சடையான்,
பேசாப்பெருமையினான்
- தாயுமானவர், தன்  மௌன குருவைக் குறித்து


நீதி நடஞ்செய், ஏரின்ப நிதி, அதை ஓதி முடியாது
- வள்ளலார்

தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே!
ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே
-  வள்ளலார்

நற்பூதி அணிந்த திருவடிவம் முற்றும் தோழி,
நான் கண்டேன்! நான் புணர்ந்தேன்! நான் அது ஆனேன்!
-  வள்ளலார்

வாக்கு இறந்த பூரணம் சொல்லாமல் சொன்னவன்
- திருவிளையாடல் புராணம்

 ஓம் என்ற பிரணவத்தை = அ+உ+ம் என பிரிக்கலாம். (அ) அறிவாக, உள்ள இறைவனை, (உ) உயிராக உணர்கிற மனிதன், (ம்) பேரின்ப நிலையாகிய மௌனத்தில் ஆழ்கிறான் என்பது பிரணவப் பொருள்.

மௌனம் அனுசரிப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றி ஒரு கதையுண்டு. மூன்று துறவிகள் மௌனம் இருந்தனர். ஐந்து நிமிடங்கள் ஆயிற்று. முதல் துறவி மற்றொரு துறவியின் முகத்தில் கரித்தூளைக் கண்டார். “உன் முகத்தில் கரி” என்றார். இரண்டாம் துறவி “நீ பேசிவிட்டாய்” என்றார். மூன்றாம் துறவி “நான் மட்டும்தான் பேசவில்லை” என்றார். தமிழன்பனின் உள்ளொலியை மௌனமாக்க்கேளுங்கள். உன் வார்த்தைகளிலேயே மிக அழகானது எது? உதடு திறகாமல் பதில் சொன்னது மொழி. ஓசை இல்லாமல் பதில் சொன்னது மொழி, வார்த்தை இல்லாமல் பதில் சொன்னது மொழி.

Friday, February 5, 2010

ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் ராஜ போகம் தர வந்தாள்

ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் ராஜ போகம் தர வந்தாள்
கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டு இன்னொரு ரகசியம் சொல்ல

ராஜராஜஸ்ரீ ராஜன் வந்தான் ராஜ போகம் தர வந்தான்


தேடிச் சென்ற பூங்கொடி காலில் பட்டது
சிந்தும் முத்தத்தால் என்னைப் பின்னிக் கொண்டது

பின்னிக் கொண்ட பூங்கொடி தேனைத் தந்தது
தேனைத் தந்ததால் இன்ப ஞானம் வந்தது

ஞானம் ஒன்றல்ல பிறந்த கானம் ஒன்றல்ல
எழுந்த ராகம் ஒன்றல்ல இணைந்த தாளம் ஒன்றல்ல
 ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல


(கண்ணொரு)

மேகம் வந்த வேகத்தில் மோகம் வந்தது
மெல்ல மெல்ல நாணத்தில் தேரும் வந்தது

கன்னிப் பெண்ணின் மேனியில் மின்னல் வந்தது
காதல் என்பதோர் மழை வெள்ளம் வந்தது

பெண்ணும் பெண்ணல்ல இணைந்த கண்ணும் கண்ணல்ல
மலர்ந்த பூவும் பூவல்ல அமர்ந்த வண்டும் வண்டல்ல
ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல

இடையொரு வேதனை நடை ஒரு வேதனை கொள்ள
இதழொரு பாவமும் முகமொரு பாவமும் சொல்ல

(ராஜராஜஸ்ரீ)

- கண்ணதாசன்,  1967,  திரைப்படம் - ஊட்டி வரை உறவு







Sunday, January 3, 2010

தமிழ்விசை என்னும் TamilKey

This is entry is not about minnumsol but about one of the best tools to input Tamil in FireFox, that helps to create blogs on minnumsol.

FireFox addon, the best option to input Tamil in FireFox on any operating system.
I like this much better than Google Indic tools.
The main advantage is I know what I would get for what I type.
Google Indic tool in the attempt to be smart, many times, provide what I do not expect to see.

https://addons.mozilla.org/en-US/firefox/addon/2994

நதியின் பிழையன்று நறும்புனலின்மை

"நதியின் பிழையன்று நறும்புனலின்மை; அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழையன்று, மகன் பிழையன்று மைந்த!
விதியின் பிழை! நீ இதற்கென்னை வெகுண்டதென்றான்!"

 அற்புதமான கம்பன் வரிகளை மேற்கோள் காட்டும் கோவை சிறைவாசியின் வலைப்பூ:

http://madhumithaa.blogspot.com/2007/10/blog-post_25.html


இந்த வரிகளின் சாரத்தைப் பிரதிபலிக்கும் கண்ணதாசனின் திரைக் கவிதை:

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

நல்லவர்க்கெல்லாம்...
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

ஆண்டவன் அரிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
ஆண்டவன் அரிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே

நல்லவர்க்கெல்லாம்...
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

படம் - தியாகம்
இசை : இளையராஜா
பாடியவர் - T.M.சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்