Sunday, November 29, 2009

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை

51. அச்சோப் பதிகம் - அனுபவவழி அறியாமை

(தில்லையில் அருளியது)

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 650

நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு
அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே. 651

-  மாணிக்கவாசகர், திருவாசகம்,
see
http://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0003_02.html

Saturday, November 28, 2009

அற்றது பற்றெனில் உற்றது வீடு

அற்றது பற்றெனில் உற்றது வீடு

2806
அற்றது பற்றெனில்--உற்றது வீடுஉயிர்
செற்றது மன்னுறில்--அற்றிறை பற்றே. 1.2.5

2807
பற்றில னீசனும்--முற்றவும் நின்றனன்
பற்றிலை யாய் அவன்--முற்றி லடங்கே. 1.2.6

2808
அடங்கெழில் சம்பத்து--அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழி லஃதென்று--அடங்குக வுள்ளே. 1.2.7


2809
உள்ள முரைசெயல்--உள்ளவிம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை--யுள்ளிலொ டுங்கே. 1.2.8

2810
ஒடுங்க அவன்கண்--ஒடுங்கலு மெல்லாம்
விடும்பின்னு மாக்கை--விடும்பொழு தெண்ணே. 1.2.9

2811
எண்பெருக் கந்நலத்து--ஒண்பொரு ளீறில
வண்புகழ் நாரணன்--திண்கழல் சேரே. (2) 1.2.10

2812
சேர்த்தடத் தென்குரு--கூர்ச்ட கோபன்சொல்
சீர்த்தொடை யாயிரத்து--ஓர்த்தவிப் பத்தே. (2) 1.2.11 

- திருவாய்மொழி, நம்மாழ்வார்
Ref
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0008_01.html

Thursday, November 26, 2009

mgrsongs.blogspot.com

Excellent page with lyrics in Tamil for  a lot of MGR songs

http://mgrsongs.blogspot.com/

Wednesday, November 25, 2009

Whatever We Think About

Whatever we Think about, Thank about, we Bring about

- Quoted by Praba on 90.1FM, itsdiff.com, Stanford Radio, on 11/25/09, Thanksgiving Special

Tuesday, November 24, 2009

அம்மாடி பொன்னுக்கு தங்க மனசு

அம்மாடி பொன்னுக்கு தங்க மனசு
பொங்குது சின்ன மனசு
கண்ணுக்கு நூறு வயசு
அவ சொல்லுக்கு நாலு வயசு

- கண்ணதாசன், 1970,  ராமன் எத்தனை ராமனடி

Monday, November 23, 2009

காறைபூணும் கண்ணாடிகாணும்

ஐயபுழுதி உடம்பளைந்து  இவள்பேச்சு மலந்தலையாய்
செய்யநூலின் சிற்றாடை செப்பனடுக்கவும் வல்லளல்லள்
கையினில் சிறுதூதையோடு  இவள்முற்றில் பிரிந்துமிலள்
பையரவணைப் பள்ளியானோடு கைவைத்து இவள்வருமே

பொங்குவெண் மணல்கொண்டு சிற்றிலும் முற்றத்திழைக்கலுறில்
சங்குசக்கரம் தண்டுவாள்  வில்லுமல்லது   இழைக்கலுறால்
கொங்கை இன்னம் குவிந்தெழுந்தில கோவிந்தனோடுஇவளை
சங்கையாகி என்னுள்ளம்  நாள்தொறும் தட்டுளுப்பாகின்றதே

காறைபூணும் கண்ணாடிகாணும்  தன்கையில் வளைகுலுக்கும்
கூறையுடுக்கும் அயர்க்கும்  தங்கொவ்வைச் செவ்வாய்திருத்தும்
தேறித்தேறிநின்று  ஆயிரம்பேர்த் தேவன்திறம் பிதற்றும்
மாறில்மாமணி வண்ணன்மேல்  இவள்மாலுறுகின்றாளே

- பெரியாழ்வார்

Sunday, November 22, 2009

பெண்மை அரசு

நாற்குணமும் நாற்படையா வைம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்குஞ் சிலம்பே யணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை யரசு.

- நளவெண்பா

Luck

Be ready when opportunity comes...
Luck is when preparation and opportunity meet
- Roy D. Chapin Jr

Wednesday, November 18, 2009

மாதா உடல் சலித்தாள்

மாதா உடல் சலித்தாள்; வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் கை சலித்து விட்டானே -நாதா
இருப்பையூர் வாழ் சிவனே, இன்னுமோர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா!- பட்டினத்தார்

மண்ணும் தணலாற வானும் புகையாற

மண்ணும் தணலாற வானும் புகையாற
எண்ணற்ற  தாய்மார் இளைப்பாற
பண்ணும் அயன் கையாறவும்
காலன் காலாறவும் கண்பார்
ஐயா திரு ஐயாறா

- பட்டினத்தார்
கிருபானந்தா வாரியாரின் "பட்டினத்தார்" ஒலி நாடாவிலிருந்து

Monday, November 16, 2009

ஓரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு

ஓரு தங்க ரதத்தில்
பொன் மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த....
என் தெய்வம் தந்த
என் தங்கை

செம்மண்ணிலே தண்ணீரை போல்
உண்டான சொந்தம் இது
சிந்தாமணி ஜோதியை போல்
ஒன்றான பந்தம் இது
தங்கையல்ல....
தங்கையல்ல
தாயானவள்
கோடி பாடல் நான் பாட பொருளானாள்

கண்ணீரினால் நீராட்டினால்
என் ஆசை தீராதம்மா
முன்னூறு நாள் தாலாட்டினால்
என் பாசம் போகாதம்மா
என் ஆலயம்
பொன் கோபுரம்
ஏழேழு ஜன்மங்கள் ஆனலும் மாறாதம்மா

ராஜாவை நான்
ராஜாத்திக்கு
துணையாக பார்ப்பேனம்மா
தேவர்களின் பல்லாக்கிலே
ஊர்கோலம் வைப்பேனம்மா
மனமங்கலம்
திரு குங்குமம்
வாழ்க என்று பல்லாண்டு நான் பாடுவென்

- கண்ணதாசன், 1979, தர்ம யுத்தம்

இசை: இளையராஜா
பாடியவர்: மலேசியா வாசுதேவன்
இயக்குநர்:  R.C. சக்தி
நடிப்பு: ரஜினி, ஸ்ரீதேவி

Sunday, November 15, 2009

தை மாத மேகம் அது தரையில் ஆடுது - ஆண்குரல்

தை மாத மேகம்
தரினோம் தரினோம் தரினோம்
மேகம்
தரினனனா
மேகம் மேகம் மேகம் ஹோய்

தை மாத மேகம் அது தரையில் ஆடுது
தை மாத மேகம் அது தரையில் ஆடுது
அது தேடும் அந்த வானில் இந்த நிலவு பாடுது

போடு
தை மாத மேகம் அது தரையில் ஆடுது
அது தேடும் அந்த வானில் இந்த நிலவு பாடுது
தை மாத மேகம் அது தரையில் ஆடுது

மாலை இல்லை மேளம்இல்லை
உறவு வந்தது
மனைவி இல்லை கர்ப்பம் இல்லை
முழந்தை வந்தது
ராகம் வேறு தாளம் வேறு
பாட்டு வந்தது
ஞானம் இல்லை என்ற போதும்
பேச்சு வந்தது

மாலை இல்லை மேளம்இல்லை
உறவு வந்தது 
ஹாஹா
மனைவி இல்லை கர்ப்பம் இல்லை
முழந்தை வந்தது


இரவினிலே கடவுள் ஐயா
ஏற்றி வைத்தார் இந்த
நிலா விளக்கு
ஹாஹா
அம்புலி அம்புலி
புள்ளய பாரு
அழகு புள்ளய பாரடியோ
ஹாஹா
அழகு புள்ளய உங்கிட்ட
விட்டா எங்களுக்கேது கூறடியோ
கொம்பு காளைகள் பூட்டி வளர்த்த
கன்னு குட்டிய பாரடியோ
ஹாஹா
கன்னுக்குட்டிக்கு பால்கொடுக்க
உன்னால் ஆகுமா கூறடியோ
இரவினிலே கடவுள் ஐயா
ஏற்றி வைத்தார் இந்த
நிலா விளக்கு

நீ பொண்ணாக பொறந்தாயே
நிலவே
பொண்ணாக பொறந்தாயே
ஒருத்தன் பொண்டாட்டியானாயோ
ஒருத்தன் பொண்டாட்டியாகாமே
குழந்தைக்கு நீ தாயாகுமோ

நீ பொண்ணாக பொறந்தாயே
நிலவே
பொண்ணாக பொறந்தாயே
ஒருத்தன் பொண்டாட்டியானாயோ
ஒருத்தன்  பொண்டாட்டியாகாமே
குழந்தைக்கு நீ தாயாகுமோ
இந்த குழந்தைக்கு நீ தாயாகுமோ

 (அடுத்த 3 வரிகள் வார்த்தை தெரியவில்லை)

- கண்ணதாசன், 1968, குழந்தைக்காக
இசை:  MSV
பாடியவர்கள்:

கண்ணதாசன் கண்ணதாசன் தான்.

கண்ணதாசன் பாட்டில் ஆடும்
வானையும் நிலவையும்
மேகத்தையும் மேகவண்ணனையும்
வியந்து வணங்கும் மின்னல்

தை மாத மேகம் அது தரையில் ஆடுது

தை மாத மேகம்
அது தரையில் ஆடுது
தை மாத மேகம்
அது தரையில் ஆடுது
அது தேடும் அந்த வானில் வெண்ணிலவே பாடுது..
நிலவே பாடுது

முத்து ரதம் ஏறும் நிலவுக்கு நாங்கள்
கொட்டி வைத்த வைரம் நட்சத்திரமாக
பூமாலை வெண்மேகமே

தை மாத மேகம்
அது தரையில் ஆடுது

இரவினில் கடவுள் ஏற்றிய விளக்கு
எல்லோர்க்கும் குல விளக்கு
இரவினில் கடவுள் ஏற்றிய்
உயரத்தில் இருந்தே உலகத்தைக் காக்கும்
கல்யாணத் திருவிளக்கு
அழுகின்ற குழந்தை காணும் கண் காட்சி
அம்மா வெண்ணிலவில் அரசாட்சி
குற்றம் புரிவோர்கள் கண்டு கொள்ளும் சாட்சி
நல்லோர்கள் நெஞ்சில் உள்ள மனசாட்சி

தை மாத மேகம்
அது தரையில் ஆடுது

பாலுக்கு வெண்மை படைத்தவன் எவனோ
பாப்பாவைப் படைத்தவன் அவன் தானே
பாப்பாவைப் படைத்த கைகளினாலே
பால் போன்ற நிலவைப் படைத்தானே

முத்து ரதம் ஏறும் நிலவுக்கு நாங்கள்
கொட்டி வைத்த வைரம் நட்சத்திரமாக
பூமாலை வெண்மேகமே

தை மாத மேகம்
அது தரையில் ஆடுது
அது தேடும் அந்த வானில் வெண்ணிலவே பாடுது..
நிலவே பாடுது

- கண்ணதாசன், 1968, குழந்தைக்காக

பாடல்: தை மாத மேகம்
திரைப் படம்: குழந்தைக்காக
பாடியவர்: பீ.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்

தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே

ராமன் என்பது கங்கை நதி...
அல்லா என்பது சிந்து நதி...
யேசு என்பது பொன்னி நதி...
யேசு என்பது பொன்னி நதி...

நதிகள் பிறக்குமிடம் பலவாகும்
எல்லா நதியும் கலக்குமிடம் கடலாகும்..

தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே -என்னை
தேடி தேடி காவல் கொண்டான் மழலை மொழியிலே
பாப்பா  தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா

அன்னை மேரி தெய்வ பாலன்
எங்கள் யேசு தேவ  தூதன்
ராஜ சபை ஜோதி கண்டேன்
ஞான கோவில் தீபம் கண்டேன்
பாப்பா தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா

ஆல்லாஹு அக்பர் என்றேன்
ஆண்டவரே அடிமை என்றேன்
பிள்ளை ஒன்றை பேச சொன்னார்
எல்லாமும் இதுதான் என்றார்
பாப்பா தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா

வேணு கான ஓசை கேட்டேன்
விஜயன் கேட்ட கீதை கேட்டேன்
தேரில் வந்த கண்ணன் கண்டேன்
கண்ணனென்னும் ராமன் கண்டேன்
பாப்பா தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா
பாப்பா தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா

(தேவன்)
- கண்ணதாசன், 1968, குழந்தைக்காக
- முதல் முதலாக திரைப்பாடலுக்கு  தேசிய விருதை வென்ற படம் (1969)

படம் : குழந்தைக்காக
பாடியர்வர்கள்: சீர்காழி, TMS, PBS
கவிதை: கண்ணதாசன்
இசை: MSV

Thursday, November 12, 2009

ஆறுமுகமும் பன்னிரு கரமும்

மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்;ஒருமுகம்,
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே;ஒருமுகம்,
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே;ஒருமுகம்,
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே;ஒருமுகம் . .100


பன்னிரு கைகள்:

விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒருகை; உக்கம் சேர்த்தியது ஒருகை;
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதொருகை;
அங்குசங் கடாவ ஒருகை, இருகை . . . .110

ஐயிரு வட்டமொடு எ·குவலந் திரிப்ப,
ஒருகை மார்பொடு விளங்க ஒருகை
ஒருகை தாரொடு பொலிய, ஒருகை
கீழ்வீழ் தொடியடு மீமிசைக்கொட்ப, ஒருகை
பாடின் படுமணி இரட்ட, ஒருகை
நீனிற விசும்பின் மலிதுளி பொழிய, ஒருகை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட,
ஆங்குஅப் பன்னிரு கையும் பாற்படஇயற்ற,
அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிர்எழுந் திசைப்ப, வால்வளை ஞரல, . . . .120


- திருமுருகாற்றுப்படை,  கி.பி 200?


மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கு முகம் ஒன்று
ஜாதி மத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று
நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இன்று ஆறுமுகம் இன்று


- கண்ணதாசன், 1972, தெய்வம்(திரைப்படம்)

தாழை விருந்து - குற்றாலக் குறவஞ்சி

(3) சூழ மேதி இறங்குந் துறையிற்



சொரியும் பாலைப் பருகிய வாளை
கூழை வாசப் பலாவினிற் பாயக்
கொழும் பலாக்கனி வாழையிற் சாய
வாழை சாய்ந்தொரு தாழையிற் றாக்க
வருவி ருந்துக் குபசரிப் பார்போல்
தாழை சோறிட வாழை குருத்திடுஞ்
சந்திர சூடர்தென் னாரிய நாடே.

- குற்றாலக் குறவஞ்சி

Saturday, November 7, 2009

வெள்ளத்தால் போகாது,

வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
வேந்தராலும்  கொள்ளத்தான் இயலாது,
கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Thursday, October 29, 2009

அன்பே அமுதா

அன்பே அமுதா.. அன்பே
நீ பாலமுதா சுவை தேனமுதா
இல்லை பாற்கடல் பிறந்த கனியமுதா
உந்தன் சொல்லமுதா இதழ் சுவையமுதா
கொஞ்சம் நில் அமுதா அதை சொல் அமுதா

(அன்பே)

வளரும் பிறையும் தேயும் பிறையும்
வாழ சொல்வதை கேட்கின்றேன்
இரவு முழுதும் தூக்கம் இன்றி
எங்கும் உன்னை காண்கின்றேன்
கண்கள் எழுதும் கண்ணீர் கோலம்
உன்னை காட்டும் காவியம்
காலம் சென்றும் மனதில் என்றும்
வாழும் உந்தன் ஓவியம்

(அன்பே)

வாச மலரே பாச மலரே
வஞ்சி மலரே வாராயோ
ஆசை மலரில் மாலை தொடுத்து
அள்ளி எடுத்து தாராயோ
காதல் தெய்வம் மௌனம் ஆனால்
கன்னி தமிழும் வாடுமே
ஊரில் கேட்கும் மேள தாளம்
நம்மை இணைக்கும் நாதமே


- திரைப்படம்: அன்பே அமுதா?

Tuesday, October 27, 2009

நான் நேத்து பறித்த ரோஜா

நேத்து பறிச்ச ரோஜா, நான் பாத்து பறிச்ச ரோஜா
...
கரையில் நிந்கும் நாணல் கண்ணீர் சிந்தலாமா?
...
கொட்டும் மலர்கள் கட்டித் தந்தோம் பச்சைக் கிளியொன்று
கண்போல் என்றும் காத்திட வேண்டும் கருணை மனம்கொண்டு
மஞ்சள் பூசும் பெண்ணும் மைவிளையாடும் கண்ணும்
என்றும் உன்னுடன் வாழ்க மங்கல மங்கையாக
மங்கல மங்கையாக

- கண்ணதாசன், பிராப்தம், 1971

நோய் உடலிலா, மனதிலா

தேவனே என்னைப் பாருங்கள்
...
நோய் உடலிலா? மனதிலா? தேவனே!
- கண்ணதாசன், ஞான ஒளி

Sunday, October 25, 2009

இடை நினைத்தொரு கடை விரித்தனை ஏன் கண்களே?

இடை நினைத்தொரு கடைவிரித்தனை ஏன்கண்களே?
இலை மறைத்தொரு பழம்பழுத்தது ஏன்நெஞ்சமே?
சிறை எடுத்தொரு சிலைஅணைத்திட நாள்வந்தததோ?
இனித்த செங்கனி சுவைப்பதற்கோர் ஆள்வந்ததோ?

- கண்ணதாசன், 1967, மான் என்று பெண்ணுக்கொரு,  அனுபவி ராஜா அனுபவி

காக்கை குருவி எங்கள் ஜாதி

அந்தக் காலத்தில் புதுவைக் கடலோரம்,
மகாகவியின் எண்ண அலைகள்:

காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்

- ஜெய பேரிகை, பாரதி ஞானப் பாடல்கள்


நன்றி:

பாரதியின் கவிதைகளின் வலைப்பதிவு

http://enbharathi.blogspot.com

http://enbharathi.blogspot.com/2009/04/2_24.html





ஞானப் பாடல்கள் 2. ஐய பேரிகை ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடா ஐய பேரிகை கொட்டடா!
1. பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்; வியனுல கனைத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம் (ஐயபேரிகை) 2. இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளி இன்னமு தினையுண்டு களித்தோம்; கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம். (ஐயபேரிகை) 3. காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்.

vaanambaadi at wordpress.com - தமிழ் திரைப்பட கவிதைகள்

அற்புதமான புதையல் - மணியான பல தமிழ் திரைப்பாடல்களின் வரிகளை பதிவு செய்திருக்கிறது

http://vanampaadi.wordpress.com/

Quote from the site

“vanampaadi”- a site  exclusively for lyrics of Tamil film songs.Find here exceedingly greater number of Old Tamil Film Songs.Nevertheless, one may find some of my favourite hindi and mallu songs lyrics hither and thither.Currently, we have more than 800 lyrics and still lot to be stowed.
Just a few words of appreciation from you will be a valuable asset.Besides  it will add a remarkable degree of magnitude in my campaign to add further more lyrics.

Wednesday, September 9, 2009

தமிழ் அகராதிகள்

ta.wiktionary.com

On Line ந. கதிர்வேல் பிள்ளையின் தமிழ் அகராதி - N. Kathiraiver Pillai's Tamil Moli Akarathi: Tamil-Tamil dictionary
On Line ஜே.பி. பெப்ரீசியசின் தமிழ் அகராதி - J. P. Fabricius's Tamil and English Dictionary.
On Line டேவிட் டபிள்யூ. மெக்அல்பின் தமிழ் அகரமுதலி - A core vocabulary for Tamil - David W McAlpin
On Line வின்ஸ்லோ: ஆங்கிலம் - தமிழ் அகரமுதலி - A comprehensive Tamil and English dictionary of high and low Tamil. - Miron Winslow
On Line Webulagam Dictionary - Tamil - English - Tamil
On Line English-Tamil Dictionary
Cologne On Line Tamil Dictionary கொலீன் தமிழ் அகராதி
ஆங்கிலம்-தமிழ்-சிங்கள அகரமுதலி
Online Tamil Lexicon (Dictionary) - TSCII Interface
On Line Raamesh Gowri Raghavan - Tamil - English - Tamil Dictionary
Tamil-English Dictionary - V. Visvanātha Pillai - Online
Tamil Dictionaries - Downloads
English - Tamil Dictionary in pdf - Indy Ram : Part 1 - Part 2 - Part 3 - Part 4 - Part 5 - Geetha Ramaswamy - Part 6
Pals Tamil E-Dictionary
Tamil-English dictionary and English-Tamil dictionary (romanized) - Raamesh Gowri Raghavan
Pulavan - Paalam: Tamil-Tamil Dictionary; English - Tamil Dictionary "Panacea’s Pulavan Tamil-Tamil Dictionary is a comprehensive compendium of Tamil words with meanings and cross-references. The basis for this work is the Kazhaga Agaraathi of the Saiva Siddhantha Trust."
English - Tamil Dictionary (pdf)
Technical Tamil Dictionary (pdf)
ஆங்கிலம்-தமிழ் சொற் பட்டியல் (PDF வடிவில்)

  • சென்னை பல்கலைக் கழக அகராதி
  • ந. கதிர்வேல் பிள்ளையின் தமிழ் அகராதி
  • ஜே.பி. பெப்ரீசியசின் தமிழ் அகராதி
  • டேவிட் டபிள்யூ. மெக்அல்பின் தமிழ் அகரமுதலி
  • வின்சுலோ தமிழ் அகராதி
  • கொலீன் தமிழிலக்கயத் தேடி
  • கொலீன் தமிழ் அகராதி
  • Thursday, August 27, 2009

    some kaadhal songs

    From the thread http://tfmpage.com/forum/archives/17480.8856.17.55.45.html

    In the film President Panchacharam Kannadasan has given another description by Kathalarkal as follws:

    AAN:
    yaro nee yaro
    Perazhagu enbathun ero
    sevvaanum thenum siru meenum maanum
    vadivaagiya penno?

    PENN:
    maano sentheno
    am mangai oviyam thano
    sevvaazhai polum kani paavai ingey
    vanthathuvum veeno?

    AAN:
    marathu kombiley pazhutha maangani
    madiyil veezhnthatho ingey-oru
    vaarthai sonnaval engey?
    pon vanna kovaiye anna paavaiyey
    marainthu nitpathen angey?
    veli vanthu kaanuvaai ingey

    From the film Naney Raja:

    Sinthu paadum thenral vanthu
    inbam ponga veesuthey
    ninru aadum mullaiyodu
    konjum kaathal pesuthey

    velli panth poley vaanil
    thingal vanthu kaayuthey
    alli kandu inbam kondu
    anbu thenil thoyuthey

    vinmeengal yaavum sernthu
    unnai kaanath theduthey
    mannathi mannan ummai kaana vanthu kooduthey


    ennulla veenayil ezhunthidum naathamey
    ponnaana vaazhvil inbam ponga vantha geethamey

    kannal suvai theney
    enrum neeyey enthan oviyam
    ennillaatha inbam nalkum neeyey enthan kaaviyam

    Another song from Naaney Raaja:

    Manthamaarutham thavazhum
    chandran vaaniley thigazhum
    intha velaiyey inbamey
    egaanthamaana intha velaiyey inbamey

    vanthu vanthu veesum mullai
    manathukkethu eedey illai
    senthamizh pennai poley
    sirikkuthey ithennam paalai

    Kan padaitha payanai naaney
    kandukkonden unaal maaney
    pennuruvaai vanthen munney
    pesum deivam neeye Kanney
    pon porul yaavum thunbamey unnodu pesum
    intha velaiyey inbamey

    vizhithu ennai paarppathaaley
    vibaram onrum purinthen illai
    pazhutha maambazhathai kandu
    pasithavan kaathiruppathillai
    karuthai kollai kondaai vaazhviley
    unnodu pesum intha velaiyey inbamey..


    Another super varunanai of the kaathali by Kannadasan:

    Ponnenrum poovenrum thenenrum solveno
    Pennai paarthaal sollath thonrum
    innum noorayiram

    Moonru kanichaaru onraaka pizhinthu
    moga rasam konjam alavodu kalanthu
    Bothai mathuvaga ponmeni malarnthu
    poovai vanthaal pennaaga piranthu

    Kodai vasanthangaL kuLirkkaalam enRu
    Odum paruvangaL kaNa nEram ninRu
    kathal kavi paadum avaL mEni kaNdu
    kaaNak kaN vENdum oru kOdi inRu

    kanni ilLang koothal kalyaaNap paLLi
    kaNkaL oLi veesum athikaalai veLLi
    thenRal viLayaadum avaL pErai cholli
    inbam avaL innum aRiyaatha kalvi

    thaNNilavu theeniRaikka

    By Mayavanathan in film padiththaal mattum poodhumaa

    Thannilavu thaenriakka,
    Thaazhai maram neer theLikka
    Kanni magal nadai payandru sendraal
    Ilam Kaadhalanai kandu naani nindraal
    Naani nindraal

    Nenjam adhil alai ezhumba
    Thanjam malar adikalanga
    Anji anji idai thuvazha vandhaal
    Angu anbar ullam thanai ninaindhu nindraal
    Ninaindhu nindraal

    Thannilavu thaeniraikka . . .

    ViN alandha manam irukka,
    MaN alandha adi edukka,
    POn alandha udal nadunga vandhaal
    Oru poo alandha mugathai kandu nindraal
    Kandu nindraal

    Thannilavu thaeniraikka . . .

    POttirukka poovirukka,
    Pootha malar manam irukka,
    Kattilukkum miga nerungi vandhaal
    Iru kaN vizhiyil kavidhai kandu nindraal
    Kandu nindraal!

    Thannilavu thaeniraikka . . .

    Monday, May 25, 2009

    ஒருமடமாதும் ஒருவனுமாகி - பட்டினத்தார்

    நன்றி: http://www.treasurehouseofagathiyar.net/28100/28157.htm

    அன்பர்களே,

    பட்டினத்தடிகளின் மிகப்பிரபலமான "ஒருமடமாதும் ஒருவனுமாகி"
    என்னும் பாடலை இங்கே இணைத்துள்ளேன்.
    இக்காலத்தவர் புரிந்து வாசித்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக
    வரிப்பிளந்து, பிரித்து, நான்கு நான்கு அடிகளாக எழுதியுள்ளேன்.
    புணர்ச்சியடைந்த சிலசொற்களையும் பதம் பிரித்துள்ளேன்.
    பாடலின் பொருளைக் கூடுமானவரை தானாகவே புரிந்துகொள்ளவேண்டி
    இவ்வேற்பாடு. பேசப்பட்ட சொற்களாக வருமிடங்களில் க்வொட்டேஷன்
    குறிகளைக் கொடுத்துள்ளேன். இதெல்லாமே பொருளணர்தலின்பொருட்டுச்
    செய்தவையே.
    மனிதன் கருவாக உற்பத்தியாகி, கடைசியில் நீறாகிமறைவதுவரை
    வாழ்வின் கட்டங்களைப் படம்பிடித்து பட்டினத்தடிகள் காட்டியிருக்கிறார்.
    இதற்குரிய சந்தத்தினை பட்டினத்தடிகளே தந்துள்ளார். அதன்படி
    படித்துக் கொள்ளவும்.
    அடுத்தபடியாக இதற்கு எளிய தமிழுரையும், ஆங்கில மொழியாக்கமும்
    கொடுக்கவேண்டும்.

    குறிப்புச் சந்தம்

    தன தன தான தன தன தான
    தந்ததனந்தன தந்ததனந்தன
    தனனதனந்த தனனதனந்த
    தானன தானன தானனதந்த
    தந்ததனதான தனதானனா


    ஒருமடமாதும் ஒருவனுமாகி
    இன்பசுகந்தரும் அன்புபொருந்தி
    உணர்வுகலங்கி ஒழுகியவிந்து
    ஊறுசுரோணித மீதுகலந்து-

    பனியிலோர்பாதி சிறுதுளிமாது
    பண்டியில்வந்து புகுந்து திரண்டு
    பதும அரும்பி கமடமிதென்று
    பார்வைமெய்வாய்செவி கால்கைகளென்ற-

    உருவமுமாகி உயிர்வளர்மாதம்
    ஒன்பதும் ஒன்று நிறைந்துமடந்தை
    உதரமகன்று புவியில்விழுந்து
    யோகமும்வாரமும் நாளும்அறிந்து-

    மகளிர்சேனை தரவணையாடை
    மண்மடவுந்தியு தைந்துகவிழ்ந்து
    மடமயில்கொங்கை அமுதம்அருந்தி
    ஓரறிவீரறி வாகிவளர்ந்து-

    ஒளிநகையூறல் இதழ்மடவார்உ
    வந்துமுகந்திட வந்துதவழ்ந்து
    மடியிலிருந்து மழலைபொழிந்து
    "வாஇருபோ"என நாமம்விளம்ப

    உடைமணியாடை அரைவடமாட
    உண்பவர்தின்பவர் தங்களொடுண்டு
    தெருவிலிருந்து புழ்தியலைந்து
    தேடியபாலரோ(டு) ஓடிநடந்து-
    அஞ்சுவயதாகி விளையாடியே, 1


    உயர்தருஞான குருவுபதேச
    முத்தமிழின்கலை யுங்கரைகண்டு
    வளர்பிறையென்று பலரும்விளம்ப
    வாழ்பதினாறு பிராயமும்வந்து-

    மயிர்முடிகோதி அறுபதநீலவண்டிமிர்
    தண்டொடை கொண்டைபுனைந்து
    மணிபொன்இலங்கு பணிகளணிந்து
    மாகதர்போகதர் கூடிவணங்க-

    "மதனசொரூபன் இவன்"எனமோக
    மங்கையர்கண்டு மருண்டு திரண்டு
    வரிவிழிகொண்டு சுழியவெறிந்து
    மாமயில்போலவர் போவதுகண்டு -

    மனதுபொறாமல் அவர்பிறகோடி
    மங்கலசெங்கல சந்திகழ்கொங்கை
    மருவமயங்கி இதழமுதுண்டு
    தேடியமாமுதல் சேரவழங்கி -

    ஒருமுதலாகி முதுபொருளாயி
    ருந்ததனங்களும் வம்பிலிழந்து
    மதனசுகந்த விதனமிதென்று
    வாலிபகோலமும் வேறுபிரிந்து -

    வளமையும்மாறி இளமையும்மாறி
    வன்பல்விழிந்திரு கண்களிருண்டு
    வயதுமுதிர்ந்து நரைதிரைவந்து
    வாதவிரோதகுரோதமடைந்து -
    செங்கையினில்ஓர் தடியுமாகியே. 2

    வருவதுபோவ தொருமுதுகூனும்
    மந்தியெனும்படி குந்திநடந்து
    மதியுமழிந்து செவிதிமிர் வந்து
    வாயறியாமல் விடாமல்மொழிந்து --

    துயில்வருநேரம் இருமல்பொறாது
    தொண்டையும்நெஞ்சும் உலர்ந்துவறண்டு
    துகிலிமிழந்து சுணையுமழிந்து
    தோகையர்பாலர்கள் கோரணிகொண்டு -

    "கலியுகமீதில் இவர்மரியதை
    கண்டிடும்!"என்பவர் சஞ்சலமிஞ்ச
    கலகலவென்று மலசலம்வந்து
    கால்வழிமேல்வழி சார நடந்து -

    தெளிவும்இராமல் உரைதடுமாறி
    சிந்தையும்நெஞ்சமும் உலைந்துமருண்டு
    திடமுமுலைந்து மிகவுமலைந்து
    தேறி"நல்ஆதர(வு) ஏது?"எனநொந்து -

    "மறையவன்வேதன் எழுதியவாறு
    வந்ததுகண்டமும்", என்றுதெளிந்து
    "இனியெனகண்டம்? இனியெனதொந்தம்?
    மேதினிவாழ்வுநி லாதுஇனிநின்ற -

    கடன்முறைபேசும்" எனஉரைநாவு
    றங்கிவிழுந்துகை கொண்டுமொழிந்து
    கடைவழிகஞ்சி ஒழுகிடவந்து
    பூதமும்நாலு சுவாசமும்நின்று -
    நெஞ்சுதடுமாறி வருநேரமே. 3

    வளர்பிறைபோல எயிறும்உரோம
    மும்சடையும்சிறு குஞ்சியும்விஞ்ச
    மனதுமிருண்ட வடிவுமிலங்க
    மாமலைபோல்யம தூதர்கள்வந்து -

    வலைகொடுவீசி உயிர்கொடுபோக
    மைந்தரும்வந்து குனிந்தழநொந்து
    மடியில்விழுந்து மனைவிபுலம்ப
    மாழ்கினரேஇவர் காலமறிந்து -

    "பழையவர்காணும்" எனும்அயலார்கள்
    பஞ்சுபறந்திட நின்றவர்"பந்தர்
    இடும்"எனவந்து "பறையிடமுந்த
    வேபிணம்வேக விசாரியும்",என்று -

    பலரையும்ஏவி முதியவர்தாம்இ
    ருந்தசவங்கழு வுஞ்சிலரென்று
    பணிதுகில்தொங்கல் களபமணிந்து
    பாவகமேசெய்து நாறும்உடம்பை -

    "வரிசைகெடாமல் எடும்",எனஓடி
    வந்திளமைந்தர் குனிந்து சுமந்து
    கடுகிநடந்து சுடலையடைந்து
    "மானிடவாழ்வென வாழ்(வு)?"எனநொந்து -

    விறகிடைமூடி அழல்கொடுபோட
    வெந்துவிழுந்து முறிந்துநிணங்கள்
    உருகிஎலும்பு கருகிஅடங்கி
    ஓர்பிடிநீறும்இ லாதஉடம்பை -
    நம்பும்அடியேனை இனிஆளுமே. 4


    அன்புடன்

    ஜெயபாரதி

    Tuesday, May 12, 2009

    தமிழ் திரை கானம் களஞ்சியம்

    thiraigaanam.com
    http://www.thiraigaanam.com/viewsong.php?songid=100
    http://psusheela.org/tam/lyrics.php

    Thursday, May 7, 2009

    குற்றாலமும் திரைக்கவியும்

    1. ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
    2. ஓடுதப்பா நல்ல படம்
    3. ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே - பாவை விளக்கு
    4. kutraalam kutraalam (from movie kannum kannum)
    5. chinna chinna aasai
    6. கந்தன் கருணை - குறிஞ்சியிலே வெள்ளிமலை எங்கள் மலை அம்மே
    7. போடச் சொன்னா போட்டுக்கரேன் - பைத்தியம் பிடித்தால் குற்றாலம்
    8. காஞ்சி பட்டுடுத்தி, திருக்குற்றால மலையினிலே
    9. காதலன் - இந்திரையோ இவள் சுந்தரியோ
    10. solladi abiraami
    11. கட்டோடு குழலாட
    12. சொல்லடி அபிராமி
    13. tvu song
    14. வட்ட கரிய விழி கண்ணம்மா - கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
    15. தென்றலில் ஆடைபின்ன
    16. மிஸ்ஸியம்மா - வாராயோ வெண்ணிலாவே
    17. பலே பாண்டியா - அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே

    (1) மன்னர்திரி கூடநாத ரென்னும்போ திலேமுகம்
    மாணிக்க வசந்தவல்லி நாணிக் கவிழ்ந்தாள்.

    குறத்தி சொல்லுதல்

    (2) நன்னகரில் ஈசருன்னை மேவவரு வாரிந்த
    நாணமெல்லாம் நாளைநானுங் காணவே போறேன்

    (3) கைந்நொடியிற் பொன்னிதழி மாலைவருங் காணினிக்
    கக்கத்தி லிடுக்குவாயோ வெட்கத்தை யம்மே

    (4) என்னுமொரு குறவஞ்சி தன்னையழைத் தேயவட்கு
    ஈட்டுசரு வாபரணம் பூட்டினாளே

    திருக்குறள் திருவிளையாடல்

    திருவிளையாடல்

    1. நமசிவாய வாழ்க இசை
    2. தேவர் குறளும் திருநான்மறை முடிவும்
    3. அகர முதல எழுத்தெல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு, எண்ணென்ப ஏனை எழுத்தென்ப
    4. பூப்போல பூப்போல சிரிக்கும் - குழல் இனிது
    5. நமசிவாய வாழ்க இசை - kuzal inithu
    6. வெள்ளி நிலா முற்றத்திலே - முத்தமிழில் தேனெடுத்து முக்கனியில் சாறெடுத்து - அமிழ்தினும் ஆற்ற இனிதே
    7. நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் - மாயம் செய்யும் - தந்தை மகற்காற்றும்
    8. அன்பின் வழியது உயிர்நிலை
    9. அழகென்ற சொல்லுக்கு முருகா - பரம்பொருளுக்கு குருவான - மகன் தந்தைக்காற்றும் உதவி - தந்தை மகற்காற்றும்
    10. சொல்ல சொல்ல இனிக்குதடா - ஈன்ற பொழுதினும்
    11. தத்தி செல்லும் முத்து கண்ணன் சிரிப்பு - வள்ளுவன் சொல்லை
    12. ஊரில் உண்டு நூறு மலை நானறிவேன் சாமி மலை - சொன்னதை அறிந்தவற்கு
    13. தாய் தந்த பிச்சையிலே - இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் - piRappokkum ellaa
    14. ஓடி ஓடி உழைக்கனும் - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
    15. பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
    16. இலம் என்று அசை இருப்பாரை
    17. பாட்டும் நானே பாவமும் நானே
    எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால்
    இல்லாத எப்பொருளும் இல்லையால் – சொல்லால்
    பரந்த பாவால் என் பயன்? வள்ளுவனார்
    சுரந்த பா வையத் துணை

    - திருவள்ளுவ மாலை (மதுரைத் தமிழ் நாகனார் பாடியது)

    oodhaRku eLidhaay uNardhaRku aridhaagi
    veedhap poruLaay migavilangki thiidhaRRoor
    uLLudhoRu uLLudhoRu uLLam urukkumee
    vaLLuvar vaaymozi maaNbu
    - maangkudi marudhanaar

    aaRRal aziyumenRu andhaNargaL naanmaRaiyai
    pooRRiyuraiththeettin puRaththezudhaar - eettezudhi
    vallunarum vallaarum vaLLuvanaar muppaalai
    sollidum aaRRal soorvinRu
    - pulavar koodhamanaar


    Wednesday, May 6, 2009

    குற்றாலக் குறவஞ்சி - வானரங்கள் கனி கொடுத்து

    இன்று பாகீரதி, itsdiff ரேடியோவில் மேற்கோள் காட்டினார்

    வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
    மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
    கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்
    கவனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்