Sunday, November 21, 2010

மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே

மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே  
 

ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
ரரிரரிரா ரரிரரார ரரிரரிரா ரரிரரா

மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
அன்னமே சொர்ணமே அன்றுதான் இந்த ஊர்வலம்
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே

ஆல வட்டம் போடுதடி நெல்லுப்பயிரு
ஆள வட்டம் போடுதடி கள்ளப்பருந்து
மாலயிட போரவன கண்ணில் கலந்து
மங்கை மனம் அலையுதடி மெல்லப்பறந்து
தங்கமே வைரமே இளங்கிளியே குயிலே மயிலே
இது உண்மையடி

மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே

ஊருக்கெல்லாம் பாக்கு வச்சு காத்திருப்பேன்
ஊரையெல்லாம் பாக்க வச்சு மணம் முடிப்பேன்
கூரச்சேல சரசரக்க அஞ்சி நடப்பேன்
கொண்டவனின் குணம் அறிந்து கொஞ்சி சிரிப்பேன்
அம்மம்மா செல்லம்மா இந்த மயக்கம் எனக்கும் பொறக்கும்
புது சுகமிருக்கும்

மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்


படம்: லட்சுமி
ஆண்டு:1979
வரிகள்: ஆலங்குடி சோமு
குரல்: எஸ்.பி.சசிரேகா
இசை: இளையராஜா
பாத்திரம்: ஸ்ரீதேவி
இயக்கம்:

Thursday, November 18, 2010

நீ வருவாய் என நான் இருந்தேன்(கண்ணதாசன், 1980, படம்: சுஜாதா)

 நீ வருவாய் என நான் இருந்தேன்(கண்ணதாசன், 1980, படம்: சுஜாதா)

அந்தரங்க நீர்க்குளத்தே
பூத்திருந்த தாமரைகள்
அந்தியிலே மொட்டாகி
சிந்தையிலே கோலமிட்டதோ
காதலிலே நீர்வேட்டை
காற்றினிலே மாளிகைகள்
வானகத்து வீதியினிலே
வலம்போகும் கற்பனைகள்
நான் அவரை பார்த்துவிட்டேன்
அத்தனையும் கனவுகளே


நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்

கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை
வாராயோ….

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்

அடிதேவி உந்தன் தோளில்
புதுபூவானால் இன்று
(அடிதேவி உந்தன் தோளில்
புதுபூவானால் இன்று)
அடிதேவி உந்தன்தோழி
ஒருதூதானாள் இன்று

இரவெங்கே உறவெங்கே
உனைக் காண்பேனோ என்றும்
இரவெங்கே உறவெங்கே
உனைக் காண்பேனோ என்றும்

அமுத நதியில் தினமும் என்னை நனையவிட்டு
இதழை மறைத்துக் கொண்ட இளமை அழகுசிட்டு
தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு வாராயோ?

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்

ஒரு மேடை ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே
 ஒரு மேடை ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே

குழல்மேகம் தரும் ராகம்
அது நாடாதோ என்னை?
குழல்மேகம் தரும் ராகம்
அது நாடாதோ என்னை?
சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு
எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல வாராயோ?

கண்ணதாசன், 1980, படம்: சுஜாதா
அம்மம்மா! அற்புதம்!

Sunday, November 14, 2010

பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவேபோல்

பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செஞ் சொற் கவி இன்பம்-
கன்னிம் மாடத்து உம்பரின் மாடே, களி பேடோடு
அன்னம் ஆடும் முன் துறை கண்டு, அங்கு, அயல் நின்றாள்.

See

http://www.tamilkalanjiyam.com/literatures/kambar/ramayanam/mithilaikatchippadalam.html

learn sanskrit online with links to Bagavath Gita

http://www.ibiblio.org/sanskrit/
Gita on YouTube

Bhagavad-Gita Translation 1 - Chapter 1.1- 1.35 - Swami Brahmananda


http://www.youtube.com/watch?v=jGm_ojemYpE

Wednesday, November 3, 2010

தேவன் கோவில் மணி ஓசை

தேவன் கோவில் மணி ஓசை - நல்ல
சேதிகள் சொல்லும் மணி ஓசை
பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
பாசத்தின் ஓசை மணி ஓசை
(தேவன்)

ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்
உதவும் கோவில் மணி ஓசை
தாயார் வடிவில் தாவி அணைத்தே
தழுவும் நெஞ்சில் மணி ஓசை
இது உறவினை கூறும் மணி ஓசை
இவன் உயிரினை காக்கும் மணி ஓசை
(தேவன்)

அருமை மகனே என்றொரு வார்த்தை
வழுங்கும் கோவில் மணி ஓசை
அண்ணா அண்ணா என்றோர் குரலில்
அடங்கும் கோவில் மணி ஓசை
இது ஆசை கிழவன் குரலோசை
அவன் அன்பினை காட்டும் மணி ஓசை
(தேவன்)

- கன்னதாசன், மணி ஓசை,  ஆண்டு: ?, சீர்காழி கோவிந்தராஜன்