Monday, January 31, 2011

Sunday, January 30, 2011

நாறுமலர்க் கொம்பர் நடை கற்பதென வந்தாள்

நாறுமலர்க் கொம்பர் நடை கற்பதென வந்தாள்

சீறடிய கிண்கிணி சிலம்பொடு சிலம்ப
வேறுபடு மேகலைகண் மெல்லென மிழற்ற
வேறுபடு கோதைமிசை வண்டு திசைபாட
நாறுமலர்க் கொம்பர் நடை கற்பதென வந்தாள்

- சீவக சிந்தாமணி

பாவை இடைக்கு ஆதாரம் இன்மை அறிந்து

பாவை இடைக்கு ஆதாரம் இன்மை அறிந்து

கொய்த மலரைக் கொடுங்கையினால் அணைத்து
மொய்குழலில் சூட்டுவான் முன்வந்து தையலால்
பாதார விந்தத்தே சூட்டினான் பாவை இடைக்கு
ஆதாரம் இல்லை அறிந்து

- நளவெண்பா

பின்னி வைத்த கூந்தலில்
முல்லை பூவைச் சூடினால்
கன்னி இடை பின்னல் போடுமா
சிறுமின்னல் இடைபூவை தாங்குமா?

- கவியசு, தேன் நிலவில்

மல்லிகை மாமாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓரடையாளம்.

319 அல்லியம்பூ மலர்க்கோதாய். அடிபணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய்  துணைமலர்க் கண்மடமானே.
எல்லியம் போதினிதிருத்தல்  இருந்ததோரிடவகையில்
மல்லிகை மாமாலைகொண்டு  அங்குஆர்த்ததும் ஓரடையாளம்.
- ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி,  மூன்றாம் பத்து

ஆதரித்து, அமுதில் கோல் தோய்த்து

ஆதரித்து, அமுதில் கோல் தோய்த்து, 'அவயவம் அமைக்கும் தன்மை
யாது?' எனத் திகைக்கும் அல்லால், மதனற்கும் எழுத ஒண்ணாச்
சீதையைத் தருதலாலே, திருமகள் இருந்த செய்ய
போது எனப் பொலிந்து தோன்றும், பொன் மதில், மிதிலை புக்கார்-

- மிதிலைக் காட்சிப் படலம், கம்ப இராமாயணம் - பால காண்டம்

Friday, January 21, 2011

LearnSangamTamil by Vaidhehi

Pattinathaar Philosophy from someone in English?

Life is a journey not a destination. We are just another living organism in this universe, just another microbe. The only purpose in life is to sustain/cling to life, protect life. Success, as defined by society, is just an artificial barometer for us to compete with each other for the attention/afection of the community. But in the end, we just fade like all matter, ashes to ashes, dust to dust. Have a wonderful journey however you chose to travel
- Someone called DB
See
http://finance.yahoo.com/retirement/article/111876/character-traits-and-behaviors-that-make-you-rich