Sunday, March 14, 2010

எங்கே நீயோ நானும் அங்கே

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடுஎங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு
என் கண்ணோடு
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்
வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்
கண்ணில் நீரைக் காணாமல்
கவலை ஏதும் கூறாமல்
என்னை எண்ணி வாழாமல்
உனக்கென நான் வாழ்வேன்

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

காலம் வரும் என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும்
காத்திருப்பேன் என் பாதையில் தெய்வம் இணைந்து விடும்
காலம் வரும் என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும்
காத்திருப்பேன் என் பாதையில் தெய்வம் இணைந்து விடும்
காதல் என்றால் சேயாவேன்
கருணை என்றால் தாயாவேன்
கண்ணா உந்தன் நிழலாவேன்
உனக்கென நான் வாழ்வேன்

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

- கண்ணதாசன், 1967
பாடல்: எங்கே நீயோ நானும் அங்கே
திரைப் படம்: நெஞ்சிருக்கும் வரை
பாடியவர்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
நடிகை: கே.ஆர்.விஜயா

Wednesday, March 10, 2010

எங்கேயோ பார்த்த முகம்

எங்கேயோ பார்த்த முகம்
எங்கேயோ பார்த்த முகம்

இருவிழி மேடையில் எழுதிய ஓவியம்
இருவிழி மேடையில் எழுதிய ஓவியம்
புதுநிலவோ பூச்சரமோ
மதுமலரோ மாணிக்கமோ
எங்கேயோ பார்த்த முகம்
எங்கேயோ பார்த்த முகம்

எழுந்தே நடந்தாள் மயில் தான் இவளோ
கனிவாய் மொழிந்தால் குரல் தான் குயிலோ
கலைக்கொரு கோவில் இவள் தானோ
கலைக்கொரு கோவில் இவள் தானோ

ஊர்வசியோ மேனகையோ
வான் பிறையோ தாரகையோ
இரு விழி மேடையில் எழுதிய ஓவியம்
புது நிலவோ பூச்சரமோ
மதுமலரோ மாணிக்கமோ

எங்கேயோ பார்தத முகம்
எங்கேயோ பார்த்த முகம்

நிழல் போல் குழல் தான்
குடை போல் அமைய
தளிர்பூங்கொடி போல் இடை தான் அசைய
வளைகரம் ஆட வருவாளோ
வளைகரம் ஆட வருவாளோ

ஊர் மயங்கும் பேரழகோ
ஓடிவரும் தேர் அழகோ
இருவிழி மேடையில் எழுதிய ஓவியம்
புது நிலவோ பூச்சரமோ
மதுமலரோ மாணிகமோ

எங்கேயோ பார்த்த முகம்
எங்கேயோ பார்த்த முகம்

- கண்ணதாசன், 1969
படம்: நில் கவனி காதலி
இசை: எம்.எஸ்.வி
பாடியவர்கள்: பி.பி.ஸ்ரீனிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி

ஆண்டு வாரியான தமிழ் படங்கள்

http://ta.wikipedia.org/wiki/பகுப்பு:ஆண்டு_வாரியாக_திரைப்படங்கள்

Wednesday, March 3, 2010

false bhagavans

Good commentary at
http://www.enlightened-spirituality.org/deeksha_oneness.html

Highlights:
A genuine Guru or "remover of spiritual darkness" simply and consistently points the aspirant back to this intrinsic, inborn (sahaja) "Inner Guru" Reality. The authentically helpful human Guru or Friend does NOT needlessly entice one into an external "Grace chase," pompous worldly schemes, "energy experiences," or any other worldly phenomena high or low (heavenly, earthly, etc.). 

By contrast, however, a false or pseudo-guru, however, will use all sorts of tricks to create dependency, limited identifications, attachments, complications and delusions so that you feel like a special "somebody," somebody who is part of an elite group which is now especially empowered to usher in a Golden Age of Enlightenment for all lesser beings.

Monday, March 1, 2010

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன்
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே!

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்

தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்

முடவர்களை நடக்க வைக்கும் ப்ருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் ப்ருந்தாவனம்
முடவர்களை நடக்க வைக்கும் ப்ருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் ப்ருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் ப்ருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் ப்ருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் ப்ருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் ப்ருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் சந்நிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம்
சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம்

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் கண்ணா கண்ணா கண்னா!

கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான்

- கண்ணதாசன், 1966, ராமு
இசை: M.S.V
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், T.M. சௌந்தரராஜன்