Sunday, February 28, 2010

இயக்குநர் ஸ்ரீதர்

கவிதைகள் மின்னும் களமாக கதை செய்தவர்.
அந்த கதை களத்தில் கவிஞரின் கவிதைகளை மின்னச் செய்தவர்.

பார்க்க:
Posts on Sridhar: 
http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1584666
http://www.hindu.com/fr/2008/10/24/stories/2008102450500400.htm
http://awardakodukkaranga.wordpress.com/2008/10/25/ஸ்ரீதர்-பற்றி-இளையராஜா/
http://awardakodukkaranga.wordpress.com/2008/10/25/ஸ்ரீதரை-பற்றி-அவர்-மனைவி/
http://awardakodukkaranga.wordpress.com/2008/10/25/ஸ்ரீதர்-பற்றி-எம்எஸ்வி/


http://awardakodukkaranga.wordpress.com/ஸ்ரீதருக்கு-அஞ்சலி


ஸ்ரீதர் பட லிஸ்ட்:
  1. 1959, கல்யாணப் பரிசு, விகடன் விமர்சனம்
  2. 1960, விடிவெள்ளி
  3. 1960, மீண்ட சொர்க்கம் (நன்றி, பார்டிசன்!)
  4. 1961, தேனிலவு
  5. 1962, நெஞ்சில் ஓர் ஆலயம்
  6. 1962, போலீஸ்காரன் மகள்
  7. 1962, சுமைதாங்கி
  8. 1963, நெஞ்சம் மறப்பதில்லை
  9. 1964, கலைக் கோவில்
  10. 1964, காதலிக்க நேரமில்லை1, 2, 3, 4
  11. 1965, வெண்ணிற ஆடை
  12. 1967, நெஞ்சிருக்கும் வரை
  13. 1967, ஊட்டி வரை உறவு
  14. 1969, சிவந்த மண்
  15. 1971, அவளுக்கென்று ஒரு மனம்
  16. 1974, உரிமைக் குரல்
  17. 1975, வைர நெஞ்சம்
  18. 1978, இளமை ஊஞ்சலாடுகிறது
  19. 1979, அழகே உன்னை ஆராதிக்கிறேன்
  20. 1981, மோகனப் புன்னகை
  21. 1982, நினைவெல்லாம் நித்யா
  22. 1983, துடிக்கும் கரங்கள்
  23. 1983, ஒரு ஓடை நதியாகிறது
  24. 1984, ஆலய தீபம்
  25. 1985, தென்றலே என்னை தொடு
  26. 1986, நானும் ஒரு தொழிலாளி
  27. 1986, யாரோ எழுதிய கவிதை
  28. 1987, இனிய உறவு பூத்தது
  29. 1991, தந்துவிட்டேன் என்னை
  30. கொடிமலர்
  31. அலைகள்
  32. மீனவ நண்பன்
  33. ஓ மஞ்சு
  34. ஸௌந்தர்யமே வருக வருக
இதை தவிர அவர் 1954-எதிர்பாராதது, 1956-அமர தீபம், 1961-புனர்ஜென்மம், 1959-உத்தம புத்திரன் ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதி இருக்கிறார்.

Saturday, February 27, 2010

இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்

இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே - பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே

(இளமை)

அணைத்து வளர்ப்பவளூம் தாயல்லவோ
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ
புலவர் பாடுவதும் கவிஞர் நாடுவதும்
கலைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ - பெண்
இயற்கையில் சீதனப் பரிசல்லவோ

(இளமை)

பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா - ஒரு
பூவைக்கு மாலையிடும் மணம் வருமா
இன்று தேடி வரும் நாளை ஓடி விடும்
செல்வம் சிரித்தபடி அமுதிடுமா - எந்தச்
செல்வமும் பெண்மையின் சுகம் தருமா

(இளமை)
- கண்ணதாசன், 1962

படம் : ஹலோ மிஸ்டர் ஜமீந்தார்
குரல் : சுசீலா
இசை : வி- ரா
நடிகை : சாவித்திரி

நன்றி: சந்த்ரு
http://psusheela.org/tam/show_lyrics.php?id=687

Sunday, February 14, 2010

மௌனம்

பார்க்க
http://www.thannambikkai.net/2005/06/01/2885/

மௌனம் என்பது வரம்

- Author: பேராசிரியர் டாக்டர். பி.கி. சிவராமன்,  Jun 2005

மோனம் என்பது ஞான வரம்பு
- ஔவையார்

சும்மா இரு சொல்லற என்றதுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே
- அருணகிரிநாதர், கந்தர் அனுபூதி

பிள்ளை மதி செஞ்சடையான்,
பேசாப்பெருமையினான்
- தாயுமானவர், தன்  மௌன குருவைக் குறித்து


நீதி நடஞ்செய், ஏரின்ப நிதி, அதை ஓதி முடியாது
- வள்ளலார்

தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே!
ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே
-  வள்ளலார்

நற்பூதி அணிந்த திருவடிவம் முற்றும் தோழி,
நான் கண்டேன்! நான் புணர்ந்தேன்! நான் அது ஆனேன்!
-  வள்ளலார்

வாக்கு இறந்த பூரணம் சொல்லாமல் சொன்னவன்
- திருவிளையாடல் புராணம்

 ஓம் என்ற பிரணவத்தை = அ+உ+ம் என பிரிக்கலாம். (அ) அறிவாக, உள்ள இறைவனை, (உ) உயிராக உணர்கிற மனிதன், (ம்) பேரின்ப நிலையாகிய மௌனத்தில் ஆழ்கிறான் என்பது பிரணவப் பொருள்.

மௌனம் அனுசரிப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றி ஒரு கதையுண்டு. மூன்று துறவிகள் மௌனம் இருந்தனர். ஐந்து நிமிடங்கள் ஆயிற்று. முதல் துறவி மற்றொரு துறவியின் முகத்தில் கரித்தூளைக் கண்டார். “உன் முகத்தில் கரி” என்றார். இரண்டாம் துறவி “நீ பேசிவிட்டாய்” என்றார். மூன்றாம் துறவி “நான் மட்டும்தான் பேசவில்லை” என்றார். தமிழன்பனின் உள்ளொலியை மௌனமாக்க்கேளுங்கள். உன் வார்த்தைகளிலேயே மிக அழகானது எது? உதடு திறகாமல் பதில் சொன்னது மொழி. ஓசை இல்லாமல் பதில் சொன்னது மொழி, வார்த்தை இல்லாமல் பதில் சொன்னது மொழி.

Friday, February 5, 2010

ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் ராஜ போகம் தர வந்தாள்

ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் ராஜ போகம் தர வந்தாள்
கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டு இன்னொரு ரகசியம் சொல்ல

ராஜராஜஸ்ரீ ராஜன் வந்தான் ராஜ போகம் தர வந்தான்


தேடிச் சென்ற பூங்கொடி காலில் பட்டது
சிந்தும் முத்தத்தால் என்னைப் பின்னிக் கொண்டது

பின்னிக் கொண்ட பூங்கொடி தேனைத் தந்தது
தேனைத் தந்ததால் இன்ப ஞானம் வந்தது

ஞானம் ஒன்றல்ல பிறந்த கானம் ஒன்றல்ல
எழுந்த ராகம் ஒன்றல்ல இணைந்த தாளம் ஒன்றல்ல
 ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல


(கண்ணொரு)

மேகம் வந்த வேகத்தில் மோகம் வந்தது
மெல்ல மெல்ல நாணத்தில் தேரும் வந்தது

கன்னிப் பெண்ணின் மேனியில் மின்னல் வந்தது
காதல் என்பதோர் மழை வெள்ளம் வந்தது

பெண்ணும் பெண்ணல்ல இணைந்த கண்ணும் கண்ணல்ல
மலர்ந்த பூவும் பூவல்ல அமர்ந்த வண்டும் வண்டல்ல
ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல

இடையொரு வேதனை நடை ஒரு வேதனை கொள்ள
இதழொரு பாவமும் முகமொரு பாவமும் சொல்ல

(ராஜராஜஸ்ரீ)

- கண்ணதாசன்,  1967,  திரைப்படம் - ஊட்டி வரை உறவு