Thursday, December 30, 2010

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

-கண்ணதாசன்

Sunday, December 26, 2010

மாம்பழத்து வண்டு

மாம்பழத்து வண்டு வாசமலர்ச் செண்டு
யார்வரவைக் கண்டு வாடியது இன்று!

கோடி விழி பட்டு கோல விழி சிட்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு
கோடி விழி பட்டு கோல விழி சிட்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு

ஓ....................................................................

மாம்பழத்து வண்டு வாசமலர்ச் செண்டு
யார்வரவைக் கண்டு வாடியது இன்று!

கோடை மழை மேகம் கோபுரத்து தேகம்
கொஞ்ச வரும் நேரம் கொண்டதென்ன கோபம்
கொஞ்ச வரும் நெரம் கொண்டதென்ன கோபம்

என்னுதென்ன என்றாய் நான் இருக்கும்போது
என்னுதென்ன என்றாய் நான் இருக்கும்போது
தென்றல் வந்து உன்னை தீண்டியது என்ன ? ? ? ?

ஓ........................................................................

மாம்பழத்து வண்டு வாசமலர்ச் செண்டு
யார்வரவைக் கண்டு வாடியது இன்று!

கன்னியர்க்கு தென்றல் அன்னை முறை அன்றோ
அன்னையவள் மெல்ல ஆடை தொடுவளா
சொன்னபடி கேட்டு என்ன செய்ய வேண்டும்
கன்னி உன்னை எந்தன் கை சிறையில் வைத்தேன்
ஓ............................................................................................


மாம்பழத்து வண்டு வாசமலர்ச் செண்டு
யார்வரவைக் கண்டு வாடியது இன்று!

கோடி விழி பட்டு கோல விழி சிட்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு

தேடிச் சோறு நிதம் தின்று

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?


-பாரதி 

Sunday, December 19, 2010

அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்

அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா

அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா
ஒண்ணோடு ஒண்ணாக...கண்ணோடு கண்ணாக
அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா

நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா
நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா

மேகங்கள் இல்லாத வானில்லையே
நீயின்றி எப்போதும் நானில்லையே
மேகங்கள் இல்லாத வானில்லையே
நீயின்றி எப்போதும் நானில்லையே

ஒண்ணோடு ஒண்ணாக...கண்ணோடு கண்ணாக
அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா

வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
வாடைக்கு சுகமாக வருகின்றதோ
வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
வாடைக்கு சுகமாக வருகின்றதோ

எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா
எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா

ஒண்ணோடு ஒண்ணாக...கண்ணோடு கண்ணாக
அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா

சிப்பிக்குள் முத்துக்கள் நான் பார்க்கவா
சிந்தாத முத்தங்கள் நான் கேட்கவா
எப்போது கேட்டாலும் தருவேனம்மா
எங்கே நீ இருந்தாலும் வருவேனம்மா

ஒண்ணோடு ஒண்ணாக...கண்ணோடு கண்ணாக
அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா
ஒண்ணோடு ஒண்ணாக...கண்ணோடு கண்ணாக

படம்: பொல்லாதவன்
பாடல்: கண்ணதாசன், 1980
இசை: விஸ்வநாதன்
குரல்: பாலா, வாணி ஜெயராம்