Tuesday, April 12, 2011

மல்லிகை மாமாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓரடையாளம் - பின்னணி

மல்லிகை மாமாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓரடையாளம் - பின்னணி
பின்னணி கதை, பார்க்க:
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=5116

திருமணமான புதிது. சீதையும் இராமனும் காற்று நடுவே நுழையினும் பொறுத்துக்கொள்ள இயலாத அன்றில்கள்போல் இணை பிரியாமல் நெருங்கி காதல் களியில்ஈடுபட்டி ருந்தனர். வேடிக்கைப் பேச்சுகளும் வினோதக் கதைகளும் பரிமாறிக்கொண்டிருந்தனர்.

""என்னிடம் இவ்வளவு நெருங்கிப் பழகுகின்றாயே! ஏதாவது காரணத்தால் நான் பிரிந்து செல்ல நேர்ந்தால் என்ன செய்வாய்?'' என்று கேட்டான் இராமன்.

""என்ன செய்வேனா? பிரியவே முடியாதபடி கட்டிப் போட்டு விடுவேன்!'' என்றாள் சீதை.

""என்னைக் கட்ட உன்னால் முடியுமா?'' என்றான் இராமன்.

""இதோ, கட்டிக் காட்டுகிறேன்'' என்று கூறிக்கொண்டே சீதை, த

ன் கூந்தலில் சுற்றி யிருந்த மல்லிகைச் சரத்தை அவிழ்த்து, அதைக் கொண்டு அருகிலிருந்த செண்பகக் கொடியில் இராமனைக் கட்டி விட்டாள்.மல்லிகைச் சரம்தானே! இராமன் எளிதில் அறுத்துவிட மாட்டானா என்று நமக்குத் தோன்றும்.

அது வெற்று மல்லிகைச் சரமா?

கண்ணனைக் கட்டிய சகாதேவன் மனதை விடப் பல மடங்கு அன்பு அம்மல்லிகைச்சரத்தில் பிணைந்துள்ளதே! மல்லிகைச் சரத்தை அறுக்கலாம். அதில் பிணைந்துள்ளகாதலன்பை இராமனால் அறுக்க இயலுமா?

"அல்லியம்பூ மலர்க்கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம்

சொல்லுகேன் கேட்டருள்வாய்! துணை மலர்க்கண் மடமானே!

எவ்வியம்போது இனிதிருத்தல் இருந்ததோர் இடவகையில்

மல்லிகைமா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததுமோர் அடையாளம்'

என்று இராமன், சீதையைத் தேட அனுமனை அனுப்பியபோது, இச்செய்தியை அடையாளமாகக் கூறினான்.

No comments:

Post a Comment