Monday, June 6, 2011

பாரதியின் இன உணர்வு

பாரதியின்  இன உணர்வு  

A different perspective at Keetru.com, please see

http://www.keetru.com/literature/essays/valasa_vallavan_2.php


KeetruLiteratureArticle
கட்டுரை
பாரதியின் பார்ப்பன இன உணர்வு
வாலாசா வல்லவன்


...முந்தைய பகுதி: பாரதியின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் தன்மை என்ன?

பாரதிக்கு இளமைக் காலம் முதலே பார்ப்பன இன உணர்வு இருந்து வந்துள்ளது என்பதை வாழ்க்கை வரலாறு, கவிதைகள், கதைகள், கட்டுரைகள் முதலியவற்றைப் படிக்கும் போது அறிய முடிகிறது. ஆகவே இவருடைய பார்ப்பன இன உணர்வு எத்தகையது என்பது இவண் ஆராயப்படுகிறது.

Bharathi பாரதியார் தன்னுடைய சுயசரிதையைக் ‘கனவு’ என்ற தலைப்பில் 1910இல் வெளியிட்டுள்ளார். இதில் இவருடைய இளமைக் காலத்தில் தன்னுடைய தந்தைக்கு வறுமை நிலை வந்ததைக் கூறும்போது கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

பார்ப்பனக் குலம் கெட்டழிவு எய்திய
பாழடைந்த கலியுகம் ஆதலால்
வேர்ப்ப வேர்ப்ப பொருள் செய்வதொன்றையே
மேன்மை கொண்ட தொழில் எனக்கொண்டனன் (1)

எனக் கூறுகிறார். பார்ப்பனர்கள் உடல் வியர்க்க வேலை செய்யக்கூடாது என்பது மனு தர்மத்தின் விதி. இந்தப் பாழாய்ப் போன கலியுகத்தில் தன்னுடைய தந்தை வியர்வை சிந்திப் பொருள் சேர்க்க வேண்டிய நிலைக்கு ஆளாக நேர்ந்தது என்று உளம் நொந்து கூறுகிறார்.

‘சமூகம்’ என்ற தலைப்பில் பாரதி நால்வருணத்தை மிகவும் வலியுறுத்திப் பாடுகிறார்:

வேதம் அறிந்தவன் பார்ப்பான் - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்
பண்டங்கள் விற்பவன் செட்டி
பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி
நாலு வகுப்புமிங்கு ஒன்றே - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி (2)

இங்குப் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் முதலிய நால்வருணங்கள் இருக்க வேண்டும் என்கிறார் பாரதி. நால்வருணம் அழிந்தால் மனித இனமே அழிந்து விடும் என்கிறார். அப்படியானால் பார்ப்பானுக்கு என்றைக்கும் சூத்திரன் உழைத்துப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்; பார்ப்பான் கோவில் பூசை செய்து விட்டு நோகாமல் சாப்பிட வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்.

To read the full content, please see

http://www.keetru.com/literature/essays/valasa_vallavan_2.php

No comments:

Post a Comment