Sunday, March 14, 2010

எங்கே நீயோ நானும் அங்கே

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடுஎங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு
என் கண்ணோடு
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்
வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்
கண்ணில் நீரைக் காணாமல்
கவலை ஏதும் கூறாமல்
என்னை எண்ணி வாழாமல்
உனக்கென நான் வாழ்வேன்

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

காலம் வரும் என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும்
காத்திருப்பேன் என் பாதையில் தெய்வம் இணைந்து விடும்
காலம் வரும் என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும்
காத்திருப்பேன் என் பாதையில் தெய்வம் இணைந்து விடும்
காதல் என்றால் சேயாவேன்
கருணை என்றால் தாயாவேன்
கண்ணா உந்தன் நிழலாவேன்
உனக்கென நான் வாழ்வேன்

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

- கண்ணதாசன், 1967
பாடல்: எங்கே நீயோ நானும் அங்கே
திரைப் படம்: நெஞ்சிருக்கும் வரை
பாடியவர்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
நடிகை: கே.ஆர்.விஜயா

No comments:

Post a Comment