Sunday, September 22, 2013

வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்

வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்

படம் : என்னை போல் ஒருவன்
வரிகள் :கண்ணதாசன்
இசை : MSV
குரல் : TMS - PS

வேலாலே விழிகள் இங்கு ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
ஆ ஆ ஹா ஆ ஆ ஓ ஹோ ஹா

நீரோடு தானாடும் தேரோடும் திருநாள் எங்கே
மல்லிகை தாமரை துள்ளிடும் மெல்லிய பூப் போன்ற மங்கை இங்கே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...... பூப் போன்ற மங்கை இங்கே
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்

பட்டுச் சேலையில் மின்னும் பொன்னிழை பாவை மேனியில் ஆடும்
தொட்டுத் தாவிட துள்ளும் என் மனம் கட்டுக் காவலை மீறும்
ஆ ஆ ஆ ஆ ஆ
கட்டும் கைவளை சொட்டும் மெல்லிசை மொட்டும் உன்னுடன் ஓடும்
சிட்டுக் கண்களில் வெட்டும் மின்னலும் பட்டம் போல் விளையாடும்
பூ வண்ணக் கூந்தல் என் மஞ்சமானால்
நான் கொஞ்சம் பாட நீ கொஞ்சம் பாட

மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்

தங்கச் செங்கனி அங்கம் உன்னுடல் சங்கமம் ஆவது என்று
திங்கள் மங்கையின் செவ்வாய் உன்னுடன் பொங்கும் நாடகம் என்று
ஓ ஓஓ ஓஓ ஓஓ
தித்திக்கும் ஒரு முத்துப் பூச்சரம் தத்தைக்கே தரவென்று
சித்தம் சொன்னது தேகம் வந்தது நித்தம் ஆயிரம் உண்டு
பாடுங்கள் இன்னும் தாளங்கள் துள்ளும்
கூடுங்கள் என்றோர் பெண் உள்ளம் சொல்லும்

மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
ஆ ஆ ஹா ஆ ஆ ஓ ஹோ ஹா

No comments:

Post a Comment