Monday, November 23, 2009

காறைபூணும் கண்ணாடிகாணும்

ஐயபுழுதி உடம்பளைந்து  இவள்பேச்சு மலந்தலையாய்
செய்யநூலின் சிற்றாடை செப்பனடுக்கவும் வல்லளல்லள்
கையினில் சிறுதூதையோடு  இவள்முற்றில் பிரிந்துமிலள்
பையரவணைப் பள்ளியானோடு கைவைத்து இவள்வருமே

பொங்குவெண் மணல்கொண்டு சிற்றிலும் முற்றத்திழைக்கலுறில்
சங்குசக்கரம் தண்டுவாள்  வில்லுமல்லது   இழைக்கலுறால்
கொங்கை இன்னம் குவிந்தெழுந்தில கோவிந்தனோடுஇவளை
சங்கையாகி என்னுள்ளம்  நாள்தொறும் தட்டுளுப்பாகின்றதே

காறைபூணும் கண்ணாடிகாணும்  தன்கையில் வளைகுலுக்கும்
கூறையுடுக்கும் அயர்க்கும்  தங்கொவ்வைச் செவ்வாய்திருத்தும்
தேறித்தேறிநின்று  ஆயிரம்பேர்த் தேவன்திறம் பிதற்றும்
மாறில்மாமணி வண்ணன்மேல்  இவள்மாலுறுகின்றாளே

- பெரியாழ்வார்

No comments:

Post a Comment