Sunday, November 29, 2009

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை

51. அச்சோப் பதிகம் - அனுபவவழி அறியாமை

(தில்லையில் அருளியது)

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 650

நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு
அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே. 651

-  மாணிக்கவாசகர், திருவாசகம்,
see
http://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0003_02.html

No comments:

Post a Comment